புதுக்கோட்டையில் நவ.29-இல் விவசாயிகள் குறைதீர்க்கும் நாள் கூட்டம்!

 
paddy farm

புதுக்கோட்டை மாவட்டத்தில் நவம்பர் மாதத்திற்கான விவசாயிகள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் வரும் 29ஆம் தேதி நடைபெறும் என ஆட்சியர் கவிதா ராமு தெரிவித்துள்ளார்.

இது தொடர்பாக அவர் வெளியிட்டு உள்ள செய்திக்குறிப்பில், புதுக்கோட்டை மாவட்டத்தில் நவம்பர் 2022 மாதத்திற்கான விவசாயிகள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் வரும் 29ஆம் தேதி செவ்வாய்க்கிழமை அன்று காலை 10 மணி அளவில் புதுக்கோட்டை மாவட்ட ஆட்சியரக கூட்ட அரங்கில், புதுக்கோட்டை மாவட்ட ஆட்சியர் கவிதா ராமு தலைமையில் நடைபெற உள்ளது. இக்கூட்டத்தில் பல்வேறு துறை அரசு அலுவலர்கள் கலந்து கொண்டு விவசாயிகளின், விவசாயம் சம்பந்தப்பட்ட கோரிக்கைகளுக்கு பதில் அளிக்க உள்ளார்கள்.

collector kavidha

எனவே புதுக்கோட்டை மாவட்ட விவசாயிகள் இக்கூட்டத்தில் கலந்து கொண்டு விவசாயம் தொடர்புடைய கோரிக்கைகளை மட்டும் தெரிவித்து பயன்பெறுமாறு கேட்டுக்கொள்ளப்படுவதாக, ஆட்சியர் கவிதா ராமு தெரிவித்துள்ளார்.