தேனி மாவட்டத்தில் வரும் 29-ல் விவசாயிகள் குறைதீர்க்கும் நாள் கூட்டம்!

 
paddy farm

தேனி மாவட்ட விவசாயிகள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் வரும் 29ஆம் நடைபெறும் என ஆட்சியர் முரளிதரன் தெரிவித்துள்ளார்.

இதுதொடர்பாக அவர் வெளியிட்டு உள்ள செய்திக்குறிப்பில்,  தேனி மாவட்டத்தில் விவசாயிகள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் வருகின்ற (29.07.2022) வெள்ளிக்கிழமை அன்று காலை 11 மணியளவில் மாவட்ட ஆட்சித்தலைவர் முரளிதரன் அவர்கள் தலைமையில்  மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்ட அரங்கில் நடைபெற உள்ளது. தேனி மாவட்டத்தை சார்ந்த விவசாய சங்க பிரதிநிதிகள் அந்தந்த வட்டாரத்தில் உள்ள வேளாண்மை சம்பந்தமான திட்டங்கள் மற்றும் குறைகளை விவசாயிகள் குறை தீர்க்கும் நாள் கூட்டத்தில் கலந்து கொண்டு தெரிவித்து பயன்பெறவும், மேலும், தங்களது குறைகளை மனுக்களாக குறைதீர் தின கூட்டத்தில் வழங்கிடலாம்.

theni collector

விவசாயிகளிடம் பெறப்படும் மனுக்கள் மீது கண்காணித்து சம்மந்தப்பட்ட துறை அலுவலர்களுக்கு மனுக்களை அனுப்பி உரிய நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும். எனவே, விவசாயிகள் மற்றும் விவசாய சங்க பிரதிநிதிகள் விவசாயிகள் குறைதீர்க்கும் கூட்டத்தில் கோவிட் - 19 வழிகாட்டு நெறிமுறைகளை கடைபிடித்து, கூட்டத்தில் கலந்து கொண்டு பயன்பெற வேண்டும் என, ஆட்சியர் முரளிதரன் தெரிவித்துள்ளார்.