தோட்டத்தில் காயங்களுடன் சடலமாக கிடந்த விவசாயி... கொலையா? என போலீசார் விசாரணை!

 
dead

திருவண்ணாமலை அருகே விவசாயி மர்மமான முறையில் உயிரிழந்த சம்பவம் குறித்து போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

திருவண்ணாமலை மாவட்டம் உண்ணாமலை பாளையம் பகுதியை சேர்ந்தவர் விவசாயி ஆனந்தன். இவர் நேற்று முன்தினம் தனது விவசாய தோட்டத்திற்கு புறப்பட்டு சென்றார். ஆனால் நீண்ட நேரமாகியும் அவர் வீட்டிற்கு திரும்பவில்லை என கூறப்படுகிறது. இதனால் சந்தேகமடைந்த உறவினர்கள் அவரை பல்வேறு இடங்களில் தேடி அலைந்தனர். ஆனால் அவர் கிடைக்கவில்லை. இந்த நிலையில், தோட்டத்தில் உள்ள தண்ணீர் தொட்டியின் அருகே ஆனந்தன் உடலில் ரத்த காயங்களுடன் மர்மமான முறையில் இறந்து கிடந்தார்.

tiruvannamalai gh

இதனை கண்டு அதிர்ச்சியடைந்த உறவினர்கள், இதுகுறித்து வானாபுரம் காவல் நிலையத்திற்கு தகவல் அளித்தனர். அதன் பேரில், போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று, ஆனந்தனின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக திருவண்ணாமலை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும், இந்த சம்பவம் குறித்து புகாரின் அடிப்படையில் போலீசார் வழக்குப்பதிவு செய்து, ஆனந்தன் அடித்துக்கொலை செய்யப்பட்டாரா? என்ற கோணத்தில் தீவிரமாக விசாரித்து வருகின்றனர்.