கன்னியாகுமரி அருகே பொறியாளர் தூக்கிட்டு தற்கொலை!

 
suicide

கன்னியாகுமரி அருகே பொறியாளர் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் குறித்து போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

கன்னியாகுமரி அருகே உள்ள மகாராஜபுரம் பிள்ளையார் கோவில் தெருவை சேர்ந்தவர் பொன்னையா. இவரது மகன் மணிகண்டன் (38). பொறியாளரான இவர், தனியார் நிறுவனத்தில் சூப்பர்வைசராக பணிபுரிந்து வந்தார். இந்த நிலையில், குடும்ப தகராறு காரணமாக மனைவி பிரிந்து சென்றதால், மணிகண்டன் தனது தந்தையுடன் வசித்து வந்தார்.

kumari gh

நேற்று காலை பொன்னையா வழக்கம்போல் வேலைக்கு புறப்பட்ட சென்ற நிலையில், மணிகண்டன் வீட்டில் தனியாக இருந்துள்ளார். அவர் வேலை முடிந்து வீட்டிற்கு வந்தபோது, மணிகண்டனை காணவில்லை. இதனால் மாடிக்கு சென்று பார்த்தபோது அறைக்கதவு உட்புறமாக பூட்டப்பட்டிருந்தது. நீண்ட நேரமாக கதவை தட்டியும், அவர் திறக்காததால் சந்தேகமடைந்த பொன்னையா, அக்கம் பக்கத்தினர் உதவியுடன் கதவை உடைத்துச்சென்று பார்த்தார். அப்போது, மணிகண்டன் தூக்கிட்டு தற்கொலை செய்த நிலையில் சடலமாக தொங்கினார்.

இதனை கண்டு உறவினர்கள் கதறி அழுதனர்.தகவலின் பேரில் கன்னியாகுமரி போலீசார், அவரது உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக குமரி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும், இந்த சம்பவம் குறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து மணிகண்டன் தற்கொலை செய்து கொண்டதற்கான காரணம் குறித்து விசாரித்து வருகின்றனர்.