தேனி மாவட்ட ஊரக வாழ்வாதார இயக்கத்தில் வேலைவாய்ப்பு!

 
theni collector

தேனி மாவட்டத்தில் காலியாக உள்ள வட்டார இயக்க மேலாளர் மற்றும் வட்டார ஒருங்கிணைப்பாளர் பணியிடங்களுக்கு தகுதி வாய்ந்த பெண்கள் விண்ணப்பிக்கலாம் என ஆட்சியர் முரளிதரன் தெரிவித்துள்ளார். 

இது தொடர்பாக அவர் வெளியிட்டு உள்ள செய்திக்குறிப்பில், தேனி மாவட்டம் தமிழ்நாடு மாநில ஊரக வாழ்வாதார இயக்கம், மாவட்ட இயக்க மேலாண்மை அலகில் காலியாக உள்ள 2 வட்டார இயக்க மேலாளர், 11 வட்டார ஒருங்கிணைப்பாளர் பணிக்கு முற்றிலும் தற்காலிகமாக தொகுப்பூதிய அடிப்படையில் பணிபுரிய கீழ்க்கண்ட தகுதியுடைய பெண் விண்ணப்பதாரர்களிடம் இருந்து மட்டும் விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.

வட்டார இயக்க மேலாளர் (Block Mission Manager) பணியிடத்திற்கு ஏதேனும் ஒரு துறையில் பட்டம் பெற்றிருக்க வேண்டும். 6 மாத கால கணினி படிப்பு சான்றிதழ் (MS OFFICE), கணினி அறிவியல் ( Computer Science) அல்லது கணினி பயன்பாடுகளில் (Computer Aplications) பட்டதாரிகளுக்கு முன்னுரிமை வழங்கப்படும். வாழ்வாதார திட்டம் போன்ற திட்டங்களில் குறைந்தது 3 வருடங்கள் முன் அனுபவம் பெற்றிருக்க வேண்டும். 01.10.2022 அன்று 28 வயதுக்குள் இருந்திட வேண்டும். ரூ.15,000/- மதிப்பூதியம் வழங்கப்படும். தேனி மாவட்டத்தை சேர்ந்தவராக இருக்க வேண்டும்.

jobs

 வட்டார ஒருங்கிணைப்பாளர் (Block Co-Ordinator) பணியிடத்திற்கு ஏதேனும் ஒரு துறையில் பட்டம் பெற்றிருக்க வேண்டும். 6 மாத கால கணினி படிப்பு சான்றிதழ் (MS Office) பெற்றிருக்க வேண்டும். வாழ்வாதார திட்டம் போன்ற திட்டங்களில் குறைந்தது 2 வருடங்கள் முன் அனுபவம் பெற்றிருக்க வேண்டும். அதே வட்டாரத்தில் குடியிருப்பவராக இருக்க வேண்டும். 01.10.2022 அன்று 28 வயதுக்குள் இருந்திட வேண்டும். ரூ.12,000/- மதிப்பூதியம் வழங்கப்படும். 

திட்ட இயக்குநர் / இணை இயக்குநர், தமிழ்நாடு மாநில ஊரக வாழ்வாதார இயக்கம், ஒருங்கிணைந்த அலுவலக வளாகம், ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சித்துறை, தரைதளம், அலுவலக தொலைபேசி எண் 04546 255203. தேனி மாவட்டம். விண்ணப்பங்கள் நேரில் சமர்ப்பித்திட வேண்டும்.

விண்ணப்பம் சமர்ப்பிக்க வேண்டிய கடைசி நாள் - 19.11.2022 மாலை 5.30 மணிக்குள். இதற்கு பின்னர் வரும் விண்ணப்பங்கள் ஏற்றுக்கொள்ள இயலாது மற்றும் இது தொடர்பான கூடுதல் விபரங்களுக்கு மகளிர் திட்ட அலுவலகத்தில் பணி நாட்களில் மட்டும் மாலை 6 மணிக்குள் விபரங்களை பெற்று, விண்ணப்பித்து பயனடையுமாறு ஆட்சியர் முரளிதரன் தெரிவித்துள்ளார்.