டாப்சிலிப் முகாமில் யானைகள் பொங்கல் விழா கொண்டாட்டம்!

 
topslip

ஆனைமலை புலிகள் காப்பகத்திற்குட்பட்டடாப்சிலிப் கோழி கமுத்தி யானைகள் முகாமில் வனத்துறை சார்பில் யானை பொங்கல் விழா விமரிசையாக கொண்டாடப்பட்டது.

கோவை மாவட்டம் வால்பாறை அடுத்த ஆனைமலை புலிகள் காப்பகத்திற்குட்பட்ட டாப்சிலிப் கோழி கமுத்தி யானைகள் முகாமில் 26 யானைகள் பராமரிக்கப்பட்டு வருகின்றன. இங்கு ஆண்டுதோறும் வனத்திற்கும், வனத்துறையினரின் பல்வேறு பணிகளுக்கு உதவியாக இருக்கும் யானைகளுக்கு நன்றி செலுத்தும் விதமாக ஆண்டுதோறும் யானை பொங்கல் விழா கொண்டாடப்பட்டு வருகிறது.

topslip

அதன்படி, இந்தாண்டு கோழி கமுத்தி யானைகள் முகாமில் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த யானை பொங்கல் விழாவில் காலை யானைகளை குளிப்பாட்டி, மாலை அணிவித்து மரியாதை செய்யப்பட்டது. பின்னர் மலைவாழ் மக்கள் பாரம்பரிய முறைப்படி மண் பானையில் பொங்கல் வைத்தனர்.

யானைகளுக்கு பிடித்த உணவான கரும்பு, வாழை மற்றும் ஒவ்வொரு யானைக்கும், கொள்ளு, ராகி, அரிசி சாதம் உள்ளிட்ட உணவுகள் வழங்கப்பட்டன. இந்த யானை பொங்கல் விழாவில் தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களில் இருந்து ஏராளமான சுற்றுலா பயணிகள் கலந்து கொண்டனர்.