அரியலூரில் பராமரிப்பு பணிகள் காரணமாக இன்று மின் விநியோகம் துண்டிப்பு!

 
power cut

அரியலூர் மாவட்டத்தில் மாதாந்திர பராமரிப்பு பணிகள் காரணமாக அரியலூர், தேளுர், நடுவலூர் மற்றும் செந்துறை துணை மின் நிலையங்களில் இருந்து மின்வினியோகம் பெறும் பகுதிகளில் இன்று சனிக்கிழமை மின்வினியோகம் துண்டிக்கப்படும் என ஆட்சியர் ரமண சரஸ்வதி தெரிவித்துள்ளார்.

இதுதொடர்பாக அவர் வெளியிட்டு உள்ள செய்திக்குறிப்பில், அரியலூர் துணை மின் நிலையத்தில் இருந்து மின்விநியோகம் பெறும் பகுதிகளான கயர்லாபாத், இராஜீவ்நகர், லிங்கத்தடிமேடு, வாலாஜாநகரம், வெங்கடகிருஷ்ணாபுரம், அஸ்தினாபுரம், காட்டுப்பிரிங்கியம், பெரிய நாகலூர், மண்ணுழி, புதுப்பாளையம், குறிச்சிநத்தம், சிறுவூர், பாலம்பாடி, பார்ப்பனச்சேரி ஒரு பகுதி கிருஷ்ணாபுரம், ரெங்கசமுத்திரம், கல்லங்குறிச்சி, மணக்குடி, கடுகூர், கோப்பிலியன்குடிக்காடு, அயன்ஆத்தூர், ஆனந்தவாடி, சீனிவாசபுரம், பொய்யாதநல்லூர், கொளப்பாடி, ஓட்டக்கோவில், கோவிந்தபுரம், மங்களம், தாமரைக்குளம் மற்றும் குறுமஞ்சாவடியிலும் காலை 9 மணி முதல் பணி முடியும் வரை மின் வினியோகம் துண்டிக்கப்படும் என தெரிவித்துள்ளார்.

collector ariyalur

இதேபோல், தேளுர் துணைமின் நிலைங்களில் இருந்து மின் விநியோகம் பெறும் பகுதிகளான வி.கைக்காட்டி, தேளுர், கா.அம்பாபூர், பாளையக்குடி, காத்தான்குடிகாடு, காவனுர், விளாங்குடி, ஆதிச்சனுர், மணகெதி, நாச்சியார்பேட்டை, நாகமங்கலம், ஒரத்தூர், அம்பவலர் கட்டளை, உடையவர்தீயனுர், விக்கிரமங்கலம், குணமங்கலம், கடம்பூர், ஓரியூர், ஆண்டிப்பட்டாக்காடு, சுண்டக்குடி, வாழைக்குழி, வெளிப்பிரிங்கியம், நெரிஞ்சிக்கோரை, நாக்கியர்பாளையம், மைல்லாண்டகோட்டையிலும் காலை 9 மணி முதல் பணி முடியும் வரை மின் வினியோகம் துண்டிக்கப்படும் என தெரிவித்துள்ளார்.

மேலும், நடுவலூர் துணை மின் நிலையங்களில் இருந்து மின் வினியோகம் பெறும் பகுதிகளான சுத்தமல்லி, காசான்கோட்டை, கோட்டியால், கோரைக்குழி, நத்தவெளி, புளியங்குழி, கொலையனுர், சுந்தரேசபுரம், காக்காபாளைம், பருக்கல், அழிச்சுக்குழி முழுவதிலும் மற்றும் செந்துறை துணை மின் நிலையங்களில் இருந்து மின் வினியோகம் பெறும் பகுதிகளான இராயம்புரம், பொன்பரப்பி, குழுமுர், நின்னியூர், சோழன்குறிச்சி, அயன்தத்தனுர், வங்காரம், மரூதூர், மருவத்தூர், வீராக்கண், நாகல் குழி, உஞ்சினி, நல்லாம்பாளையம், ஆனந்தவாடி, அயன்ஆத்தூர் முழுவதும் இன்று காலை 9 மணி முதல் பணி முடியும் வரை மின் வினியோகம் துண்டிக்கப்படும் என ஆட்சியர் ரமண சரஸ்வதி தெரிவித்துள்ளார்.