திருமணமாகாத விரக்தியில் கட்டிட மேஸ்திரி தற்கொலை... குமரி அருகே சோகம்!

 
dead

குமரி அருகே திருமணமாகாத ஏக்கத்தில் கட்டிட மேஸ்திரி துக்கிட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.

கன்னியாகுமரி மாவட்டம் கொல்லங்கோடு அருகே உள்ள பனவிளை பகுதியை சேர்ந்தவர் தங்கப்பன். இவரது மனைவி சாந்தி. இவர்களது மகன் ரதீஷ்(35). இவர் கட்டிட மேஸ்திரியாக வேலை செய்து வந்தார். இந்த நிலையில், ரதீஷுக்கு திருமணம் செய்வதற்காக உறவினர்கள் பல்வேறு இடங்களில் பெண் பார்த்து வந்துள்ளனர். ஆனால்  பெண் கிடைக்கவில்லை. இதனால் அவர் மனவேதனையில் இருந்து வந்துள்ளார். இந்த நிலையில், சம்பவத்தன்று இரவு வேலை முடிந்து வந்த ரதிஷ் தனது அறைக்குள் சென்று கதவை உட்புறமாக பூட்டிக்கொண்டுள்ளார்.

kumari

சிறிது நேரத்திற்கு பின்னர் அவரது தாய் சென்று கதவை தட்டியபோது திறக்கவில்லை. இதனால் குடும்பத்தினர் கதவை உடைத்துச் சென்று பார்த்தபோது ரதீஷ் துக்கிட்டு தற்கொலை செய்து கொண்ட நிலையில் சடலமாக கிடந்தார். தகவல் அறிந்த கொல்லங்கோடு போலீசார், அவரது உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக குழித்துறை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும், இந்த சம்பவம் குறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து  விசாரித்து வருகின்றனர்.