செல்போன் பயன்படுத்தியதை தாய் கண்டித்ததால் கல்லூரி மாணவி தற்கொலை!

 
suicide

புதுக்கோட்டை மாவட்டம் பொன்னமராவதி அருகே செல்போன் பயன்படுத்துவதை தாய் கண்டித்ததால் கல்லூரி மாணவி தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார்.

புதுக்கோட்டை மாவட்டம் பொன்னமராவதி அருகே உள்ள கருகப்பூலாம்பட்டி கிராமத்தை சேர்ந்தவர் முருகன். இவரது மகள் கனிகா (19). இவர் பொன்னமராவதியில் உள்ள தனியார் கல்லூரி ஒன்றில் 2ஆம் ஆண்டு படித்து வந்தார். இந்த நிலையில், கனிகா அடிக்கடி செல்போனில் பயன்படுத்தி வந்துள்ளார். இதனால் அவரை, அவரது தாய் கண்டித்து உள்ளார். இதனால் கனிகா மனவேதனையில் இருந்து வந்துள்ளார். இந்த நிலையில், வாழ்க்கையில் விரக்திடைந்த அவர் நேற்று காலை வீட்டின் அருகில் உள்ள மரத்தில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார்.

ponnamaravathi

இது குறித்து தகவல் அறிந்த பொன்னமராவதி போலீசார், சம்பவ இடத்திற்கு சென்று கனிகாவின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக வலையப்பட்டி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும், இந்த சம்பவம் குறித்து அவரது தந்தை முருகன் அளித்த புகாரின் பேரில், போலீசார் வழக்குப்பதிவு செய்து, விசாரித்து வருகின்றனர். செல்போன் பயன்படுத்தியதை பெற்றோர் கண்டித்ததால் மாணவி தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அந்த பகுதியில் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.