செல்போன் பயன்படுத்துவதை தந்தை கண்டித்ததால் கல்லூரி மாணவி தற்கொலை... நெல்லை அருகே சோகம்!

 
suicide

நெல்லை அருகே செல்போன் பயன்படுத்துவதை பெற்றோர் கண்டித்ததால் கல்லூரி மாணவி தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார்.

நெல்லை மாவட்டம் விக்கிரமசிங்கபுரம் அருகே உள்ள சிவந்திபுரத்தை சேர்ந்தவர் ஞானகபரியேல். இவரது மகள் அகல்யா(18). இவர் பாபநாசம் பகுதியில் உள்ள தனியார் கல்லூரி ஒன்றில் முதலாம் ஆண்டு படித்து வந்தார். இந்த நிலையில், அகல்யா படிப்பில் கவனம் செலுத்தாமல் அடிக்கடி செல்போன் பயன்படுத்தி வந்ததாக கூறப்படுகிறது. இதனை பெற்றோர் கண்டித்துள்ளனர். இந்த நிலையில், நேற்று முன்தினம் மாலை கல்லூரி முடிந்து வீட்டிற்கு வந்த அகல்யா, செல்போன் பார்த்துக் கொண்டிருந்தார். இதனால் ஆத்திரமடைந்த அவரது தந்தை ஞானகபரியேல், அவரை கண்டித்துள்ளார்.

nellai

இதனால் அகல்யா மனமுடைந்து காணப்பட்டு உள்ளார். இந்த நிலையில், வாழ்க்கையில் விரக்தி அடைந்த அவர், தனது அறையில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு வந்த விக்கிரமசிங்கபுரம் போலீசார், அகல்யாவின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக நெல்லை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும், இந்த சம்பவம் குறித்து வழக்குப்பதிவு செய்து, விசாரித்து வருகின்றனர்.