அருப்புக்கோட்டை அருகே கண்மாயில் மூழ்கி அண்ணன், தம்பி பலி!

 
drowned

விருதுநகர் மாவட்டம் அருப்புக்கோட்டை அருகே  கண்மாயில் மூழ்கி அண்ணன், தம்பி பரிதாபமாக உயிரிழந்தனர்.

விருதுநகர் மாவட்டம் அருப்புக்கோட்டை அருகே உள்ள பாளையம்பட்டி பகுதியை சேர்ந்தவர் சரத்குமார் (42). தொழிலாளி. இவரது மகன்கள் சந்திரமணி (10), சித்தார்த்(8). இவர்கள் அந்த பகுதியில் உள்ள பள்ளியில் முறையே 5 மற்றும் 3ஆம் வகுப்பு படித்து வந்தனர். இந்த நிலையில், நேற்று மாலை பள்ளி முடிந்து வீட்டிற்கு வந்த சிறுவர்கள், பின்னர் அந்த பகுதியில் உள்ள கண்மாய் பகுதிக்கு சென்று விளையாடி உள்ளனர். பின்னர் கண்மாயில் இறங்கியபோது எதிர்பாராத விதமாக இருவரும் நீரில் மூழ்கினர். இதனிடையே இரவு நீண்ட நேரமாகியும் பிள்ளைகள் வீடு திரும்பாததால் சந்தேகமடைந்த பெற்றோர் அவர்களை தேடிச்சென்றுள்ளனர். ஆனால் கிடைக்கவில்லை.

aruppukottai

இதனால் அவர்கள் ஏரிக்குள் இறங்கி தேடியபோது சிறுவர்கள் சந்திரமணி, சித்தார்த் ஆகியோர் நீரில் மூழ்கி பலியானது தெரியவந்தது. தகவலின் பேரில் சம்பவ இடத்திற்கு வந்த தீயணைப்பு வீரர்கள் மற்றும் அருப்புக்கோட்டை டவுன் போலீசார், சிறுவர்களின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக அருப்புக்கோட்டை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும், இந்த சம்பவம் குறித்து வழக்குப்பதிவு செய்து, விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். கண்மாயில் மூழ்கி அண்ணன், தம்பி பலியான சம்பவம் அந்த பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுதுது