ஈரோட்டில் அடுத்தடுத்து 2 வீடுகளில் பூட்டை உடைத்து பணம் கொள்ளை... மர்மநபர்கள் கைவரிசை!

 
robbery

ஈரோடு மூலப்பாளையம் பகுதியில் அடுத்தடுத்து 2 வீடுகளின் பூட்டை உடைத்து பணம் மற்றும் வெள்ளிப்பொருட்கள் திருடப்பட்ட சம்பவம் பரபரப்பை  ஏற்படுத்தி உள்ளது.

ஈரோடு மூலப்பாளையம் விநாயகர் கோவில் 3-வது வீதியில் வசிப்பவர் முனுசாமி. கட்டிட மேஸ்திரியான இவர், கடந்த சில நாட்களுக்கு முன் குடும்பத்துடன் வெளியூருக்கு சென்றிருந்தார். தொடர்ந்து, இன்று காலை முனுசாமி வீட்டுக்கு வந்துள்ளர். அப்போது, வீட்டின் பூட்டு உடைக்கப்பட்டு கதவு திறந்த நிலையில் கிடந்துள்ளது. இதனை  கண்டு அதிர்ச்சியடைந்த முனுசாமி மற்றும் குடும்பத்தினர் உள்ளே சென்று பார்த்தனர்.

அப்போது, வீட்டில் இருந்த பீரோ உடைக்கப்பட்டு அதிலுருந்த ரூ.30 ஆயிரம் ரொக்கப் பணத்தை மர்மநபர்கள் திருடிச் சென்றது தெரியவந்தது.  இதுகுறித்து அவர் ஈரோடு தாலுகா காவல் நிலையத்திற்கு  தகவல் அளித்தார். அதன் பேரில், போலீசார் சம்பவ இடத்திற்கு நேரில் சென்று விசாரணை மேற்கொண்டனர். மேலும், தடயவியல் நிபுணர்களும் வந்து கைரேகை பதிவுகளை சேகரித்தனர். 

police

இந்த நிலையில், அதே வீதியைச சேர்ந்தவர் ஓய்வுபெற்ற பொதுப்பணித் துறை ஊழியரான துரைராஜ் என்பவரும் குடும்பத்தினருடன் வெளியூர் சென்றிருந்த நிலையில், மர்மநபர்கள் அவரது வீட்டின் பூட்டை உடைத்து பீரோவில் இருந்த ரூ.50 ஆயிரம் பணம், வெள்ளித் தட்டுகள் உள்ளிட்டவற்றை திருடிச் சென்றது தெரியவந்தது.

ஒரே வீதியில் அடுத்தடுத்து 2 வீடுகளில் பணம், வெள்ளி ப்பொருட்கள் கொள்ளையடிக்கப்பட்ட பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. இநுது சம்பவம் குறித்து தாலுகா போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.  இதனிடையே,  கடந்த சில நாட்களுக்கு முன்பு விநாயகர் கோவில் 9-வது வீதியில் முன்னாள் போஸ்ட் மாஸ்டர் வீட்டில் 40 பவுன் நகை, 15 ஆயிரம் பணத்தை மர்மநபர் திருடிச் சென்றது குறிப்பிடத்தக்கது.