திருப்பூர் அருகே துணிகரம்... வீட்டின் பூட்டை உடைத்து 30 பவுன் நகை கொள்ளை!

 
robbery

திருப்பூர் மாவட்டம் பெருமாநல்லூரில் வீட்டின் பூட்டை உடைத்து 30 பவுன் நகைகளை மர்மநபர்கள் திருடிச் சென்ற சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

திருப்பூர் மாவட்டம் பெருமாநல்லூர் கூட்டுறவு நகரை சேர்ந்தவர்கள் மணிகண்டன் - ஜெயலட்சுமி தம்பதியினர். இவர்கள் நேற்று திருப்பூரில் உள்ள தனது உறவினர் வீட்டிற்கு சென்றிருந்தனர். பின்னர், இன்று காலை இருவரும் பெருமாநல்லூருக்கு திரும்பினர். அப்போது, வீட்டின் பூட்டு உடைக்கப்பட்டு கதவு திறந்து கிடந்தது. அதிர்ச்சியடைந்த தம்பதியினர் உள்ளே சென்று பார்த்தபோது, மர்மநபர்கள் பீரோவை உடைத்து அதில் இருந்த 30 பவுன் நகைகளை திருடிச் சென்றது தெரியவந்தது. இது குறித்து மணிகண்டன், பெருமாநல்லூர் காவல் நிலையத்தில் புகார் அளித்தார்.

tiruppur

அதன் பேரில், போலீசார் சம்பவ இடத்திற்கு நேரில் சென்று விசாரணை மேற்கொண்டனர். மேலும், இந்த கொள்ளை சம்பவம் குறித்து வழக்குப்பதிவு செய்து, அந்த பகுதியில் உள்ள சிசிடிவி கேமரா பதிவுகளை கைப்பற்றி ஆய்வு செய்து வருகின்றனர். வீட்டின் பூட்டை உடைத்து 30 பவுன் நகை கொள்ளையடிக்கப்பட்ட சம்பவம் அந்த பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.