செம்பட்டி அருகே ஜேசிபி இயந்திரம் மீது பைக் மோதி விபத்து - முதியவர் பலி!

 
dgl

திண்டுக்கல் மாவட்டம் செம்பட்டி அருகே சாலை பணியில் ஈடுபட்டிருந்த ஜேசிபி இயந்திரத்தின் மீது இருசக்கர வாகனம் மோதிய விபத்தில் முதியவர் பரிதாபமாக உயிரிழந்தார்.

மதுரை மாவட்டம் சோழவந்தான் அருகே உள்ள முள்ளிபள்ளம் தென்கரைபுதூரை சேர்ந்தவர் பாண்டியன் (58). திருப்பூரில் பணிபுரிந்து வரும் இவர் பொங்கல் பண்டிகைக்காக திருப்பூரில் இருந்து தனது இருசக்கர வாகனத்தில் மதுரைக்கு சென்று கொண்டிருந்தார். இதனிடையே, திண்டுக்கல் மாவட்டம் செம்பட்டி அடுத்த எஸ்.பாறைப்பட்டி அருகே கெப்புசோலைப்பட்டி என்ற இடத்தில் சாலை விரிவுபடுத்தும் பணியில் ஜேசிபி இயந்திரம் ஈடுபட்டிருந்தது. அப்போது, அந்த வழியாக வந்த பாண்டியன் எதிர்பாராத விதமாக ஜேசிபி எந்திரத்தின் மீது இருசக்கர வாகனத்தை மோதினார்.

accident

இந்த விபத்தில் அவருக்கு தலையில் படுத்த காயம் ஏற்பட்டது. இதனை அடுத்து, சாலை பணியில் ஈடுபட்டிருந்தவர்கள் அவரை மீட்டு திண்டுக்கல் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். ஆனால் மருத்துவமனை செல்லும் வழியிலேயே பாண்டியன் பரிதாபமாக உயிரிழந்தார். தகவலின் பேரில் செம்பட்டி போலீசார், பாண்டியனின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும், இந்த சம்பவம் குறித்து வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.