வேடசந்தூர் அருகே ஆம்னி வேன் மீது பைக் மோதி விபத்து... சிசிடிவி காட்சி வெளியீடு!

 
cctv

திண்டுக்கல் மாவட்டம் வேடசந்தூர் அருகே ஆம்னி வேன் மீது இருசக்கர வாகனம் மோதிய விபத்தில் இளைஞர் படுகாயம் அடைந்தார். 

திண்டுக்கல் மாவட்டம் வேடசந்தூர் கோகுல் நகரில் வசித்து வருபவர் வேல்முருகன். இவர் நேற்றிரவு நாகம்பட்டி பகுதியில் உள்ள கேஸ் பங்கில் தனது ஆம்னி வேனுக்கு கேஸ் நிரப்பி உள்ளார். பின்னர், ஆம்னி வேனில் வேடசந்தூருக்கு செல்வதற்காக சாலையை கடக்க முயன்றுள்ளார். அப்போது, அந்த வழியாக லட்சுமணபட்டி கிராமத்தை சேர்ந்த சங்கர் என்பவர் இருசக்கர வாகனத்தில் வீட்டிற்கு திரும்பி கொண்டிருந்தார். அப்போது, எதிர்பாராத விதமாக ஆம்னி வேனின் பக்கவாட்டு பகுதியில் இருசக்கர வாகனம் மோதி விபத்திற்குள்ளானது.

உஉ

இதில் வாகனத்தில் இருந்து வீசப்பட்ட சங்கர் பலத்த காயமடைந்தார். அவரை கேஸ் பங்க் ஊழியர்கள் மீட்டு சிகிச்சைக்காக திண்டுக்கல் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும், இந்த சம்பவம் குறித்து புகாரின் பேரில், வேடசந்தூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர். இதனிடையே ஆம்னி வேன் மீது இருசக்கர வாகனம் மோதிய விபத்து குறித்த சிசிடிவி காட்சிகள் தற்போது வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.