கல்வராயன்மலையில் பிரசவத்தின்போது தாய், சேய் பலி ; மருத்துவமனையை முற்றுகையிட்டு உறவினர்கள் போராட்டம்!

 
dead

கள்ளக்குறிச்சி மாவட்டம் கல்வராயன் மலையில் அரசு மருத்துவமனையில் பிரசவத்தின் போது தாயும், சேயும் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.

கள்ளக்குறிச்சி மாவட்டம் கல்வராயன் மலையில் உள்ள ஆவனூர் கிராமத்தை சேர்ந்தவர் பாக்யராஜ். விவசாயி. இவரது மனைவி மல்லிகா. நிறை மாத கர்ப்பிணியான மல்லிகாவுக்கு கடந்த வியாழக்கிழமை மாலை பிரசவ வலி ஏற்பட்டு ஏற்பட்டுள்ளது. இதனை அடுத்து, அவரை சேராப்பட்டு அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் அனுமதித்துள்ளனர். அங்கு மருத்துவர்கள் பணியில் இல்லாததால் செவிலியர்கள் பிரசவம் பார்த்தாக கூறப்படுகிறது. அப்போது, பிறந்த சிறிது நேரத்திலேயே குழந்தை மூச்சுத்திணறல் ஏற்பட்டு இறந்தது. இதனை தொடர்ந்து, அதிகப்படியான உதிரப்போக்கு ஏற்பட்டு மல்லிகாவும் பரிதாபமாக உயிரிழந்தார்.

kallakurichi ttn

பிரசவத்தில் தாயும், சேயும் அடுத்தடுத்து உயிரிழந்ததால் அதிர்ச்சி அடைந்த மல்லிகாவின் உறவினர்கள், செவிலியர்கள் பிரசவம் பார்த்ததால் தாயும், சேயும் உயிரிழந்ததாகவும், எனவே பணியில் இல்லாத மருத்துவர்கள் மீது நடவடிக்கை எடுக்கவும் கோரி மருத்துவமனை முன் நேற்று சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு வந்த போலீசார் அவர்களுடன் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டனர். போராட்டம் காரணமாக அந்த பகுதியில் பரபரப்பு ஏற்பட்டு உள்ளது.