வேலூரில் நவம்பர் 15 - 29 வரை ராணுவ ஆட்சேர்ப்பு முகாம் - தருமபுரி ஆட்சியர் தகவல்!

 
army

ராணுவ ஆட்சேர்ப்பு முகாம் வேலூர் மாவட்ட விளையாட்டு வளாகத்தில் நவம்பர் 15 முதல் 29ஆம் தேதி வரை நடைபெற உள்ளதாக, தருமபுரி மாவட்ட ஆட்சியர் சாந்தி தெரிவித்துள்ளார்.

இதுதொடர்பாக அவர் வெளியிட்டு உள்ள செய்திக்குறிப்பில், இந்திய ராணுவத்திற்கு அக்னி வீரர் (ஆண்கள்) அக்னி  வீரர் (ராணுவ பெண் காவலர்), ராணுவ தொழில்நுட்ப உதவி செவிலியர், உதவி செவிலியர் (கால்நடை மருத்துவம்) மற்றும் இளநிலை அதிகாரிகள் (மத ஆசிரியர்) ஆகிய பணியிடங்களுக்கு ஆட்கள் தேர்வு  செய்யப்பட உள்ளனர்.

dharmapuri

இதற்கான தேர்வு முகாம் வரும் நவம்பர் 15ஆம் தேதி முதல் நவம்பர் 29ஆம் தேதி வரை வேலூரில் உள்ள மாவட்ட விளையாட்டு திடலில் நடைபெறுகிறது. இதில் பங்கேற்க வரும் விண்ணப்பதாரர்கள் www.joinindianarmy.nic.in என்ற இணையதளத்தில் வெளியிடப்பட்டுள்ள அறிவிப்பில் குறிப்பிட்டுள்ள ஆவணங்களை தவறாமல் கொண்டு வர வேண்டும்.

மேலும், தமிழகம், ஆந்திரா மற்றும் தெலங்கானா ஆகிய மாநிலங்களை சேர்ந்த ஏற்கனவே விண்ணப்பித்த விண்ணப்பதாரர்கள் இந்த ஆட்சேர்ப்பு முகாமில் பங்கேற்கலாம் என ஆட்சியர் சாந்தி தெரிவித்துள்ளார்.