திருப்பூரில் ஆயுதப்படை காவலர் தூக்கிட்டு தற்கொலை - போலீசார் விசாரணை!

 
tirupur

திருப்பூர் மாவட்டம் நல்லூர் ஆயுதப்படை காவலர் குடியிருப்பில் காவலர் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

தேனி மாவட்டம் சுருளி பகுதியை சேர்ந்தவர் ஈஸ்வரன் (33). இவர் திருப்பூர் மாவட்ட ஆயுதப்படை பிரிவில் காவலராக பணிபுரிந்து வந்தார். இவருக்கு திருமணமாகி மனைவி மற்றும் குழந்தை உள்ளனர். இவர் குடும்பத்துடன் நல்லூரில் உள்ள காவலர் குடியிருப்பில் வசித்து வந்தார். இந்த நிலையில்,  காவலர் ஈஸ்வரன் தேவர் ஜெயந்தி விழா பாதுகாப்பு பணிக்காக மதுரை மாவட்டத்திற்கு சென்றிருந்த நிலையில், பணி முடிந்து வீட்டிற்கு திரும்பி உள்ளார்.

tirupur Gh

அப்போது, காவலர் ஈஸ்வரனுக்கும், அவரது மனைவிக்கும் இடையே தகராறு ஏற்பட்டு உள்ளது. இதில் அவர் மனமுடைந்து காணப்பட்டு உள்ளார். இந்த நிலையில், மனைவி மற்றும் குழந்தை வெளியே இருந்த சமயத்தில் அவர் வீட்டின் உள்ளே தூக்கிட்டு தற்கொலை‌ செய்து கொண்டார். பின்னர் மனைவி வீட்டிற்குள் சென்று பார்த்தபோது அவர் தூக்கில் சடலமாக தொங்கினார். இதனை கண்டு அதிர்ச்சியடைந்த மனைவி, நல்லூர் காவல் நிலைத்திற்கு தகவல் அளித்தார்.

அதன் பேரில், போலீசார் ஈஸ்வரன் உடலை மீட்டு திருப்பூர் அரசு மருத்துவமனைக்கு பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். மேலும், இந்த சம்பவம் குறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து, குடும்ப பிரச்சினை காரணமாக காவலர் ஈஸ்வரன் தற்கொலை‌ செய்து கொண்டாரா? அல்லது வேறு ஏதேனும் காரணமா? என தீவிரமாக விசாரித்து வருகின்றனர்.