சேலம் மாவட்ட அரசு குழந்தைகள் இல்லத்தில் ஆற்றுப்படுத்துநர் பணியிடங்களுக்கு விண்ணப்பங்கள் வரவேற்பு!

 
collector

சேலம் மாவட்டத்தில் உள்ள அரசு குழந்தைகள் இல்லத்தில் ஆற்றுப்படுத்துநர் பணியிடங்களுக்கு விண்ணப்பங்கள் வரவேற்கப்படுவதாக ஆட்சியர் கார்மேகம் தெரிவித்துள்ளார்.

இதுதொடர்பாக அவர் வெளியிட்டு உள்ள செய்திக்குறிப்பில், சமூக பாதுகாப்புத்துறையின் கீழ் இயங்கும் சேலம் அரசினர் கூர்நோக்கு இல்லம், சேலம் அன்னை சத்தியா அம்மையார் நினைவு அரசு குழந்தைகள் இல்லம் மற்றும் பெத்தநாயக்கன்பாளையம் அன்னை சத்தியா அம்மையார் நினைவு அரசு குழந்தைகள் இல்லம் ஆகிய 3 அரசு குழந்தைகள் இல்லத்தில்  ஆற்றுப்படுத்துநர் (ஆண் - 2 பணியிடங்கள், பெண் - 1 பணியிடம்) ஆக  ஓரு குழந்தைகள் இல்லத்திற்கு 3 பணியிடங்கள் என மொத்தம் 9 பணியிடங்களை மதிப்பூதிய அடிப்படையில் நிரப்பப்பட உள்ளது.

Image

இப்பதவிக்கு விருப்பமுள்ள மற்றும் தகுதியான உளவியல் முதுகலை பட்டம் பெற்ற 25 வயது முதல் 40 வயதுக்குட்பட்ட ஆண், பெண் விண்ணப்பதாரர்கள் ஆற்றுப்படுத்துநர் பணிக்கு உரிய அனைத்து சான்றிதழ்களையும் 21.09.2022  முதல் 30.09.2022 அன்று மாலை 5.30 மணிக்குள் சேலம் மாவட்ட https://salem.nic.in/ என்ற இணையதளத்தில் பதிவேற்றம் செய்து விண்ணப்பிக்கலாம். தகுதியான நபர்களிடம் இருந்து பெறப்படும் விண்ணப்பங்கள் உளவியல் மற்றும் ஆற்றுப்படுத்துதல் வல்லுநர்களை கொண்ட தேர்வுக்குழு மூலம் நேர்முக தேர்வு நடத்தப்பட்டு தேர்வு செய்யப்படும்.

மேலும்,தேர்வு செய்யப்படும் ஆற்றுப்படுத்துநர்களுக்கு சேவை வழங்கப்படும் நாள் ஒன்றுக்கு போக்குவரத்து செலவு உட்பட மதிப்பூதியம் ரூ.1000/-( ரூபாய் ஓராயிரம் மட்டும்) வீதம் வழங்கப்படும். இப்பணியிடம் முற்றிலும் தற்காலிகமானது. தகுதியானவர்கள் இப்பணியிடத்திற்கு விண்ணப்பித்து பயன்பெறலாம் என ஆட்சியர் கார்மேகம் தெரிவித்துள்ளார்.