கள்ளக்குறிச்சி ஆதிதிராவிடர் நலப்பள்ளிகளில் தற்காலிக ஆசிரியர் பணியிடங்களுக்கு விண்ணப்பங்கள் வரவேற்பு!

 
kallakurichi collector

கள்ளக்குறிச்சி மாவட்ட ஆதிதிராவிடர் நலப்பள்ளிகளில் காலியாக உள்ள தற்காலிக பட்டதாரி ஆசிரியர், இடைநிலை ஆசிரியர் பணியிடங்களுக்கு விண்ணப்பங்கள் வரவேற்கப்படுவதாக ஆட்சியர் ஷ்ரவன் குமார் தெரிவித்துள்ளார்.

இது தொடர்பாக அவர் வெளியிட்டு உள்ள செய்திக்குறிப்பில், கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் ஆதி திராவிடர் நலத்துறையின் கீழ் செயல்படும் பள்ளிகளில் காலியாக உள்ள பட்டதாரி மற்றும் இடைநிலை ஆசிரியர் பணியிடங்களை மாணவ - மாணவிகள் நலன்கருதி தற்காலிகமாக தொகுப்பூதியத்தில் ஆசிரியர்களை நியமனம் செய்திட சென்னை ஆதிதிராவிடர் நல இயக்குனர் ஆணை வெளியிட்டுள்ளார். அதன் படி, பட்டதாரி ஆசிரியர் நிலையில் காலிப்பணியிடங்கள் ( கணிதம்-1, அறிவியல்-1), இடைநிலை ஆசிரியர் நிலையில் - 23 காலிப் பணியிடங்கள் மாதாந்திர தொகுப்பூதியம் பட்டதாரி ஆசிரியர் நிலையில் ரூ.10 ஆயிரம் மற்றும் இடைநிலை ஆசிரியர் நிலையில் ரூ.7 ஆயிரத்து 500 என்ற அடிப்படையில் நிரப்பப்பட உள்ளது.

jobs

இப்பணியிடங்களுக்கு தேவையான கல்வித் தகுதி மற்றும் முன்னுரிமைகளாவன வரையறுக்கப்பட்ட கல்வித் தகுதிகளுடன், ஆசிரியர் தகுதித் தேர்வில் தேர்ச்சி பெற்று, இல்லம் தேடிக் கல்வித் திட்டத்தில் தன்னார்வலர்களாக பணிபுரிந்து வருபவர்கள் அல்லது வரையறுக்கப்பட்ட கல்வி தகுதிகளுடன் ஆசிரியர் தகுதி தேர்வில் தேர்ச்சி பெற்றவர்கள், மேலும் இடைநிலை ஆசிரியர்கள் நியமனத்தில் பட்டியலினத்தவர்க்கு முன்னுரிமை வழங்கப்படும். பள்ளி அமைந்துள்ள பகுதி மற்றும் அதன் அருகில் உள்ளவர்களுக்கு முன்னுரிமை வழங்கப்படும். 

விண்ணப்பதாரர்கள் எழுத்து மூலமான விண்ணப்பங்களை நேரடியாகவோ அல்லது தபால் மூலமாகவோ உரிய கல்வித்தகுதி சான்றுகளுடன் வரும் 18-ஆம் தேதி மாலை 5 மணிக்குள், கள்ளக்குறிச்சி மாவட்ட ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நல அலுவலகத்தில், மாவட்ட ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நல அலுவலரிடம் சமர்ப்பிக்க வேண்டும். மேற்படி கால நிர்ணயத்திற்கு பின்பு வரப்பெறும் விண்ணப்பங்கள் பரிசீலனைக்கு எடுத்துக்கொள்ளப்படாது என ஆட்சியர் ஷ்ரவன் குமார் தெரிவித்துள்ளார்.