போக்சோ வழக்கில் ஜாமினில் வந்த இளைஞர் தூக்கிட்டு தற்கொலை... உத்தமபாளையம் அருகே பரபரப்பு!

 
suicide

தேனி மாவட்டம் உத்தமபாளையம் அருகே போக்சோ வழக்கில் கைதாகி ஜாமினில் வந்த இளைஞர் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.

தேனி மாவட்டம் உத்தமபாளையம் அருகே உள்ள கோகிலாபுரம் பகுதியை சேர்ந்தவர் பெரியகாளை மகன் ஜெயராம் (30). கட்டிட தொழிலாளி. இவர் சிறுமி ஒருவருக்கு பாலியல் தொல்லை அளித்த புகாரில் கடந்த மே மாதம் போக்சோ வழக்கில் கைதாகினர். சிறையில் இருந்த அவர் சமீபத்தில் ஜாமினில் வெளியே வந்தார். இந்த நிலையில், ஜெயராம் சிறைக்கு சென்றது முதல் மனமுடைந்து காணப்பட்டு வந்துள்ளார்.

uthamapalayam

நேற்று வீட்டில் தனியாக இருந்தபோது அவர் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். தகவலின் பேரில் உத்தமபாளையம் போலீசார், அவரது உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக அங்குள்ள அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும், இந்த சம்பவம் குறித்து வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். ஜாமினில் சிறையில் இருந்து வந்த இளைஞர் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.