சுரண்டை அருகே கோவில் உண்டியலை உடைத்து பணத்தை திருடிய இளைஞர் கைது!

 
arrest

தென்காசி மாவட்டம் சுரண்டை அருகே அம்மன் கோவில் உண்டியலை உடைத்து பணத்தை திருடிய இளைஞரை போலீசார் கைது செய்து சிறையில் அடைத்தனர்.

தென்காசி மாவட்டம் சுரண்டை அருகே உள்ள இரட்டைக்குளம் கிராமத்தில் அம்மன் கோவில் உள்ளது. கடந்த சில நாட்களுக்கு முன் மர்மநபர்கள் இக்கோவில் உண்டியலை உடைத்து பணத்தை திருடிச் சென்றனர். இதுகுறித்து கோவில் நிர்வாகிகள் அளித்த புகாரின் அடிப்படையில் சுரண்டை காவல் நிலைய உதவி ஆய்வாளர் சொரிமுத்து வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வந்தார். விசாரணையில், சாம்பவர் வடகரை பகுதியை சேர்ந்த பீர்மைதீன் மகன் மேத்தர்(19) என்பவர் கோவில் உண்டியலை உடைத்து பணத்தை திருடியது தெரியவந்தது.

surandai

 மேலும், அவர் மீது ஏற்கனவே சுரண்டை, சாம்பவர் வடகரை, ஆய்க்குடி ஆகிய காவல் நிலையங்களில் திருட்டு வழக்குகள் நிலுவையில் உள்ளதும் தெரிய வந்தது.  இதனை தொடர்ந்து, சுரண்டை போலீசார் மேத்தர் மீது வழக்குப்பதிவு செய்து அவரை செய்தனர். தொடர்ந்து, அவர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டார்.