நத்தம் அருகே குடும்ப தகராறில் இளம்பெண் தற்கொலை... வருவாய் கோட்டாட்சியர் விசாரணை!

 
dead

திண்டுக்கல் மாவட்டம் நத்தம் அருகே திருமணமான 4 ஆண்டுகளில் இளம்பெண் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.

மதுரை மாவட்டம் சோழவந்தான் அருகே உள்ள ரிஷபம் கிராமத்தை சேர்ந்தவர் சிந்து (24). இவருக்கு, கடந்த 4 ஆண்டுகளுக்கு முன் திண்டுக்கல் மாவட்டம் நத்தம் அடுத்துள்ள வேலம்பட்டி கிராமத்தை சேர்ந்த சீமான் என்பவருடன் திருமணம் நடைபெற்றது. கணவன் - மனைவி இடையே அடிக்கடி குடும்ப தகராறு ஏற்பட்டு வந்துள்ளது. இதில் சிந்து மனமுடைந்து காணப்பட்டு வந்துள்ளார். இந்த நிலையில், வாழ்க்கையில் விரக்தியடைந்த அவர் நேற்று வீட்டில் தற்கொலை செய்து கொண்டார். இதுகுறித்து தகவல் அறிந்த சிந்துவின் பெற்றோர் அவரது இறப்பில் மர்மம் உள்ளதாக கூறி நத்தம் காவல் நிலையத்தில் புகார் அளித்தனர்.

dindigul

அதன் பேரில் போலீசார் அவரது உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக நத்தம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். தொடர்ந்து, இந்த சம்பவம் குறித்து நத்தம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர். மேலும், திருமணமான 4 ஆண்டுகளில் சிந்து தற்கொலை செய்து கொண்டதால் இந்த சம்பவம் குறித்து திண்டுக்கல் ஆர்.டி.ஓ விசாரணை மேற்கொண்டு வருகிறார். முன்னதாக, சிந்துவின் கணவர் வீட்டினர் மீது நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி மருத்துவமனை முன்பு உறவினர்கள் போராட்டத்தில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.