திருச்சி அருகே காதல் திருமணம் செய்த இளம்பெண் தூக்கிட்டு தற்கொலை!

 
suicide

திருச்சி அருகே காதல் திருமணம் செய்த இளம்பெண் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.

திருச்சி மாவட்டம் துவாக்குடி அடுத்த வாழவந்தான்கோட்டை பெரியார் நகர் பகுதியை சேர்ந்தவர் தினேஷ். ஓட்டுநர். இவர் கடந்த 2019ஆம் ஆண்டு முல்லைவாசல் பகுதியை சேர்ந்த கீர்த்தனா(21) என்பவரை காதலித்து திருமணம் செய்து கொண்டார். இத்தம்பதிக்கு குழந்தை இல்லை. இந்த நிலையில் கணவன் - மனைவி இடையே அடிக்கடி குடும்ப தகராறு ஏற்பட்டு வந்துள்ளது. இதில் கீர்த்தனா மனவேதனையில் இருந்து வந்துள்ளார்.

dead

இந்த நிலையில், நேற்று முல்லைவாசலில் உள்ள தனது பெற்றோர் வீட்டிற்கு வந்த கீர்த்தனா, யாரும் இல்லாத நேரத்தில் வீட்டில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். வெளியே சென்றுவிட்டு வீட்டிற்கு வந்த பெற்றோர் கீர்த்தனா தூக்கில் சடலமாக தொங்குவதை கண்டு கதறி அழுதனர். தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு வந்த துவாக்குடி போலீசார், அவரது உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக திருச்சி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

மேலும், இந்த சம்பவம் குறித்து கீர்த்தனாவின் பெற்றோர் அளித்த புகாரின் அடிப்படையில் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர். மேலும், திருமணமான மூன்றரை ஆண்டுகளில் கீர்த்தனா உயிரிழந்ததால் இந்த சம்பவம் குறித்து வருவாய் கோட்டாட்சியர் விசாரணை மேற்கொண்டு வருகிறார்.