திண்டிவனம் அருகே இளம்பெண் தூக்கிட்டு தற்கொலை... குடும்ப தகராறில் சோகம்!

 
suicide

விழுப்புரம் மாவட்டம் திண்டிவனம் அருகே குடும்ப தகராறில் இளம்பெண் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

விழுப்புரம் மாவட்டம் திண்டிவனம் அருகே உள்ள செங்கனிக்குப்பம் பகுதியை சேர்ந்தவர் செல்வராஜ் (32). தொழிலாளி. இவருக்கு, கடந்த சில ஆண்டுகளுக்கு முன் செஞ்சி அடுத்த நெகனூர்பட்டியை சேர்ந்த சங்கீதா (28) என்பவருடன் திருமணம் நடைபெற்று. இத்தம்பதிக்கு ஒரு மகன் உள்ளான். இந்த நிலையில், செல்வராஜுக்கும், அவரது மனைவி சங்கீதாவுக்கும் அடிக்கடி குடும்ப தகராறு ஏற்பட்டு வந்துள்ளது. இதில் சங்கீதா மனமுடைந்து காணப்பட்டு வந்துள்ளார். இந்த நிலையில், வாழ்க்கையில் விரக்தியடைந்த அவர் நேற்று மாலை வீட்டில் யாரும் இல்லாதபோது தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார்.

vilupuram

தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு வந்த வெள்ளிமேடுபேட்டை போலீசார், அவரது உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக விழுப்புரம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும், இந்த சம்பவம் குறித்து சங்கீதாவின் தந்தை சேகர் அளித்த புகாரின் அடிப்படையில் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர். குடும்ப தகராறில் இளம்பெண் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அந்த பகுதியில் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.