கிருஷ்ணகிரியில் இளம்பெண் தூக்கிட்டு தற்கொலை - போலீசார் விசாரணை!

 
suicide

கிருஷ்ணகிரியில் திருமணமான ஒன்றரை ஆண்டுகளில் இளம்பெண் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.

கிருஷ்ணகிரி பாரதியார் நகரில் வசித்து வருபவர் லட்சுமணன். இவருக்கு கடந்த ஒன்றரை ஆண்டுகளுக்கு முன் பிரியதர்ஷினி (21) என்பவருடன் திருமணம் நடைபெற்றது. இத்தம்பதிக்கு குழந்தை இல்லை. இந்த நிலையில், கணவன் - மனைவி இடையே அடிக்கடி குடும்ப தகராறு ஏற்பட்டு வந்துள்ளது. இதில் பிரியதர்ஷினி மனமுடைந்து காணப்பட்டு வந்துள்ளார். இந்த நிலையில், சம்பவத்தன்று லட்சுமணன் வீட்டில் இருந்து வெளியே புறப்பட்டு சென்றுள்ளார். அப்போது, வீட்டில் தனியாக இருந்த பிரியதர்ஷினி தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். சிறிது நேரத்திற்கு பின்னர் வீட்டிற்கு வந்த லட்சுமணன், மனைவி தற்கொலை செய்து கொண்டதை கண்டு அதிர்ச்சி அடைந்தார்.

krishnagiri

இதனால் விரக்தி அடைந்த அவர் தூக்கிட்டு தற்கொலைக்கு முயன்றார். இதனை கண்ட அக்கம் பக்கத்தினர் அவரை மீட்டு கிருஷ்ணகிரி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அங்கு அவருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு வந்த கிருஷ்ணகிரி டவுன் போலீசார், தற்கொலை செய்த பிரியதர்ஷினி உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும், இந்த சம்பவம் குறித்து வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர். மேலும், திருமணமான ஒன்றரை ஆண்டுகளில் பிரியதர்ஷினி இறந்ததால் இந்த  சம்பவம் குறித்து ஆர்.டி.ஓ விசாரணை