விருதுநகர் அருகே வீட்டில் தனியாக இருந்த பெண் அடித்துக் கொலை - இளைஞர் கைது!

 
murder

விருதுநகர் அருகே வீட்டில் தனியாக இருந்த பெண்ணை இரும்பு கம்பியால் அடித்துக் கொன்ற இளைஞரை போலீசார் கைது செய்தனர்.

விருதுநகர் அருகே உள்ள பெரிய பேராலி பகுதியை சேர்ந்தவர் கோபால். கூலி தொழிலாளி. இவரது மனைவி சரஸ்வதி (48). இவர் நேற்று காலை குழந்தைகளை பள்ளிக்கு அனுப்பிவிட்டு, வீட்டில் தனியாக இருந்துள்ளார். அப்போது, அதே பகுதியை சேர்ந்த சுருளி (30) என்பவர் சரஸ்வதியின் வீட்டிற்கு சென்று அவரிடம் தகராறு செய்ததாக கூறப்படுகிறது. அப்போது, ஆத்திரமடைந்த சுருளி, தான் வைத்திருந்த இரும்பி கம்பியால் சரஸ்வதியை சரமாரியாக தாக்கிவிட்டு தப்பியோடினார்.

virudhunagar gh

இதில் பலத்த காயமடைந்த சரஸ்வதி அலறி துடிக்கவே, அக்கம் பக்கத்தினர் ஓடிச்சென்று அவரை மீட்டு, விருதுநகர் அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்தனர். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளித்தும் பலனின்றி சரஸ்வதி பரிதாபமாக உயிரிழந்தார். தகவல் அறிந்த விருதுநகர் ஊரக காவல் நிலைய போலீசார், அவரது உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர்.

மேலும், இந்த சம்பவம் குறித்து வழக்குப்பதிவு செய்து, கொலையாளி சுருளியை கைது செய்தனர். தொடர்ந்து, அவரிடம் கொலைக்கான காரணம் குறித்து தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். வீட்டில் தனியாக இருந்த பெண் அடித்துக்கொல்லப்பட்ட சம்பவம் அந்த பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.