கோவையில் பைக் மீது டிப்பர் லாரி மோதி விபத்து - முதியவர் பலி!

 
accident

கோவையில் இருசக்கர வாகனத்தின் மீது டிப்பர் லாரி மோதிய விபத்தில் முதியவர் பரிதாபமாக உயிரிழந்தார்.

கோவை சிங்காநல்லூர் அருகே உள்ள உப்பிலிபாளையம் பகுதியை சேர்ந்தவர் நந்தகோபால். இவர் நேற்று தனது இருசக்கர வாகனத்தில் உப்பிலிபாளையத்தில் இருந்து கோவை நோக்கி திருச்சி சாலையில் சென்று கொண்டிருந்தார். தனியார் பெண்கள் கல்லூரி சந்திப்பு அருகே சென்றபோது நந்தகோபால் இருச்சர வாகனத்தின் மீது அந்த வழியாக வந்த டிப்பர் லாரி மோதி விபத்திற்குள்ளானது. இதில் வாகனத்தில் இருந்து நிலை தடுமாறி சாலையில் விழுந்த நந்தகோபால் மீது லாரி சக்கரம் ஏறி இறங்கியது. இதில் அவர் உடல் நசுங்கி சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார்.

coimbatore gh

தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு வந்த கோவை கிழக்கு போக்குவரத்து புலனாய்வு பிரிவு போலீசார், நந்தகோபாலின் சடலத்தை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக கோவை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும், இந்த சம்பவம் குறித்து வழக்குப்பதிவு செய்து டிப்பர் லாரி ஒட்டுநரிடம் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். விபத்து காரணமாக கோவை - திருச்சி சாலையில் சிறிது நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.