கோவை அருகே தனியார் பேருந்து மோதி பெண் பலி!

 
accident

கோவை மாவட்டம் கிணத்துக்கடவு அருகே சாலையை கடக்க முயன்றபோது தனியார் பேருந்துகள் மோதியதில் பெண் பரிதாபமாக உயிரிழந்தார். அவரது மகன் பலத்த காயமடைந்தார்.

கோவை மாவட்டம் கிணத்துக்கடவு அருகே உள்ள கோதவாடி பகுதியை சேர்ந்தவர் சிவலிங்கம். இவரது மனைவி அங்காத்தாள். இவர்களுக்கு முனியப்பன் என்ற மனநலம் பாதிக்கப்பட்ட மகன் உள்ளார். இன்று காலை கிணத்துக்கடவு அருகே பொள்ளாச்சி - கோவை சாலையில் உள்ள சென்றான்பாளையம் பிரிவு அருகே அங்காத்தாள், தனது மகனுடன் சாலையை கடக்க முயன்றார். அப்போது, கோவையில் இருந்து அந்த வழியாக பொள்ளாச்சி நோக்கி சென்ற 2 தனியார் பேருந்துகள், அவர்கள் மீது அதிவேகமாக மோதியது. இந்த விபத்தில் அங்காத்தாள் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார்.

pollachi

அவரது மகன் முனியப்பன் பலத்த காயமடைந்தார். அவரை அருகில் இருந்தவர்கள் மீட்டு ஆம்புலன்ஸ் மூலம் பொள்ளாச்சி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு வந்த கிணத்துக்கடவு போலிசார், விபத்தில் பலியான அங்காத்தாளின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். மேலும், இந்த விபத்து குறித்து தனியார் பேருந்து ஓட்டுநர்கள் இருவர் மீதும் வழக்குப்பதிவு செய்து, அவர்களிடம் போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.