சிறுமுகை அருகே இருசக்கர வாகனம் மீது காட்டுப்பன்றி மோதியதில் லாரி ஓட்டுநர் பலி!

 
sirumugai

கோவை மாவட்டம் சிறுமுகை அருகே இருசக்கர வாகனத்தின் மீது காட்டுப்பன்றி மோதிய விபத்தில் லாரி ஓட்டுநர் பரிதாபமாக உயிரிழந்தார்.

கோவை மாவட்டம் சிறுமுகை அடுத்த பெத்திக்குட்டை அருகே உள்ள புதுக்காடு கிராமத்தை சேர்ந்தவர் கனகராஜ்(35). இவர் லாரி ஓட்டுநராக பணிபுரிந்து வருகிறார். இவர் நேற்றிரவு 10 மணி அளவில் புளியம்பட்டியில் இருந்து தனது இருசக்கர வாகனத்தில் வீட்டிற்கு திரும்பி கொண்டிருந்தார். பெத்திக்குட்டை அருகே சென்றபோது, சாலையின் திடீரென சாலையின் குறுக்கே வந்த காட்டுப்பன்றி ஒன்று இருசக்கர வாகனத்தின் மீது மோதியது.

accident

இதில் வாகனத்தில் இருந்து துக்கிவீசப்பட்ட கனகராஜ் பலத்த காயமடைந்தார். அவரை அந்த வழியாக சென்றவர்கள் மீட்டு மேட்டுப்பாளையம் அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். ஆனால் வழியிலேயே அவர் பரிதாபமாக உயிரிழந்தார். தகவலின் பேரில் சிறுமுகை போலீசார், அவரது உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும், இந்த சம்பவம் குறித்து வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.