காதல் திருமணம் செய்த பெண் மருத்துவர் தூக்கிட்டு தற்கொலை... வேலூரில் சோகம்!

 
suicide

வேலூரில் காதல் திருமணம் செய்த பெண் மருத்துவர் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.

வேலூர் தொரப்பாடி காந்தி நகரை சேர்ந்தவர் செல்வகுமார். இவர் தனியார் மருத்துவமனையில் மருத்துவராக பணிபுரிந்து வருகிறார். இவரது மனைவி காயத்ரி (32). இவர் அதே மருத்துவமனையில் மருத்துவராக பணிபுரிந்து வருகிறார். இவர்கள் இருவரும் கடந்த 4 ஆண்டுகளுக்கு முன் காதலித்து திருமணம் செய்து கொண்டனர். இவர்களுக்கு குழந்தை இல்லை. இந்த நிலையில், கணவன்  - மனைவி இருவரும் வெவ்வேறு நேரங்களில் பணிக்கு சென்று வந்துள்ளனர்.

இதனால் இருவரும் ஒன்றாக சேர்ந்து இருக்க முடியவில்லை என காயத்ரி மனவேதனையில் இருந்து வந்துள்ளார். இந்த நிலையில், சில நாட்களுக்கு முன் செல்வகுமார் டெல்லிக்கு சென்றிருந்தார். இதனால் வீட்டில் காயத்ரி தனியாக இருந்துள்ளார். நேற்று செல்வகுமார் போனில் அழைத்தபோது காயத்ரி நீண்டநேரமாக போனை எடுக்கவில்லை என கூறப்படுகிறது. இதனால் சந்தேகமடைந்த செல்வகுமார், விமானம் மூலம் சென்னை வந்து, நேற்றிரவு  வீட்டிற்கு வந்து பார்த்துள்ளார்.

vellore gh

அப்போது, காயத்ரி வீட்டில் தூக்கிட்டு தற்கொலை செய்த நிலையில் சடலமாக தொங்கினார். இதனை கண்டு அவர் கதறி அழுதார். தகவலறிந்து சம்பவ இடத்திற்கு வந்த பாகாயம் போலீசார், காயத்ரியின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக வேலூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும், இந்த சம்பவம் குறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர். மேலும், திருமணமான 4 ஆண்டுகளில் காயத்ரி தற்கொலை செய்து கொண்டதால் இந்த சம்பவம் குறித்து வருவாய் கோட்டாட்சியர் விசாரணை மேற்கொண்டு வருகிறார்.