கோவை அருகே விவசாயி கிணற்றில் குதித்து தற்கொலை!

 
suicide

கோவை அருகே புற்றுநோய் பாதிப்பால் விவசாயி கிணற்றில் குதித்து தற்கொலை செய்து கொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.

கோவை மாவட்டம் கிணத்துக்கடவு அருகே உள்ள வேலாயுதம்பாளையம் கிராமம் கல்லன்காட்டு தோட்டம் பகுதியை சேர்ந்தவ்ர அப்புசாமி. விவசாயி. இவருக்கு தொண்டை புற்றுநோய் இருந்து வந்துள்ளது. இதற்காக கோவையில் உள்ள தனியார் மருத்துவமனை ஒன்றில் சிகிச்சை பெற்று வந்துள்ளார். இந்த நிலையில், கடந்த சில நாடகளாக நோயின் தீவிரம் அதிகரித்ததால் அவரால் சாப்பாடு, தண்ணீர் அருந்த முடியாத நிலை ஏற்பட்டு உள்ளது. இதனால் அப்புசாமி மனமுடைந்து காணப்பட்டு வந்துள்ளார். இந்த நிலையில், இன்று காலை தோட்டத்திற்கு செல்வதாக கூறிவிட்டு அப்புசாமி புறப்பட்டு சென்றுள்ளார். பின்னர் நீண்ட நேரமாகியும் அவர் வீடு திரும்பவில்லை என கூறப்படுகிறது.

pollachi

இதனால் சந்தேகமடைந்த உறவினர்கள் அவரை பல்வேறு இடங்களில் தேடினர். அப்போது, வீட்டின் அருகில் உள்ள கிணற்றில் அப்புசாமி சடலமாக மிதந்துள்ளார். இதனால் அதிர்ச்சியடைந்த குடும்பத்தினர், கிணத்துக்கடவு போலீசாருக்கு தகவல் அளித்தனர். அதன் பேரில்,  சம்பவ இடத்திற்கு வந்த போலீசார், தீயணைப்புத்துறை வீரர்கள் உதவியுடன் அவரது உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக பொள்ளாச்சி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும், இந்த சம்பவம் குறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து, விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.