தண்ணீர் தொட்டிக்குள் தவறி விழுந்து 3 வயது சிறுமி பலி... அவினாசி அருகே சோகம்!

 
dead

திருப்பூர் மாவட்டம் அவினாசி அருகே தோட்டத்தில் விளையாடியபோது தண்ணீர் தொட்டிக்குள் தவறி விழுந்து 3 வயது சிறுமி பரிதாபமாக உயிரிழந்தார். 

திருப்பூர் மாவட்டம் அவினாசி அருகே உள்ள உப்பிலிபாளையம் பகுதியை சேர்ந்தவர் பிரிட்டோ இன்பராஜ். இவரது மனைவி சபினா. இவர்களது 3 வயது மகள் அன்டோனிசிப். இவர் நேற்று வீட்டின் அருகில் உள்ள தோட்டத்தில் விளையாடி கொண்டிருந்துள்ளார். அப்போது, எதிர்பாராத விதமாக அருகில் இருந்த தண்ணீர் தொட்டிக்குள் சிறுமி அன்டோனிசிப் தவறி விழுந்தார். இதனை கண்டு அதிர்ச்சியடைந்த உறவினர்கள் மற்றும் கிராமத்தினர் கிணற்றில் இறங்கி தேடினர். அப்போது, சிறுமி மயங்கிய நிலையில் மீட்கப்பட்டார்.

avinashi

இதனை தொடர்ந்து, அவரை சிகிச்சைக்காக அன்னூர் அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். அங்கு அவரை பரிசோதனை செய்த மருத்துவர்கள் அன்டோனிசிப் ஏற்கனவே உயிரிழந்து விட்டாக தெரிவித்தனர். இதனை கேட்டு பெற்றோர் மற்றும் உறவினர்கள் கதறி அழுதனர். தகவலின் பேரில் அவினாசி போலீசார், சிறுமியின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும், இந்த சம்பவம் குறித்து தந்தை பிரிட்டோ இன்பராஜ் புகாரின் அடிப்படையில் அவினாசி போலீசார், வழக்குப்பதிவு செய்து தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். தண்ணீர் தொட்டிக்குள் தவறி விழுந்து சிறுமி பலியான சம்பவம் அந்த பகுதி மக்களிடையே சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.