பள்ளிக்கு செல்ல விருப்பிமில்லாததால் 8ஆம் வகுப்பு மாணவர் தற்கொலை... சேலத்தில் சோகம்!

 
suicide

சேலத்தில் பள்ளிக்கு செல்ல விருப்பம் இல்லாததால் 8ஆம் வகுப்பு மாணவர் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.

சேலம் ஜான்சன்பேட்டை பிள்ளையார் நகரில் வசித்து வருபவர் சிவகுரு. இவர் பெயிண்டராக பணிபுரிந்து வருகிறார். இவரது 13 வயது மகன் அரசகுரு. இவர் அதே பகுதியில் உள்ள தனியார் பள்ளியில் 8ஆம் வகுப்பு படித்து வந்தார். இந்த நிலையில், அரசகுருவுக்கு, பள்ளிக்கு செல்ல விருப்பம் இல்லை என கூறப்படுகிறது. இதனால் அவர் கடந்த சில நாட்களாக பள்ளிக்கு செல்லாமல் வீட்டிலேயே இருந்து வந்துள்ளார்.

salem

இதனால் அவரை பெற்றோர் கண்டித்து நேற்று திங்கட்கிழமை பள்ளிக்கு செல்லும்படி அறிவுறுத்தி உள்ளனர். இதனால் அவர் மனமுடைந்து காணப்பட்டு வந்துள்ளார். இந்த நிலையில், ஞாயிற்றுக்கிழமை இரவு தனது வீட்டின் அருகில் உள்ள உறவினர் வீட்டிற்கு சென்றிருந்த அரசகுரு, அங்கு தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். இதனை கண்டு பெற்றோர் மற்றும் உறவினர்கள் கதறி அழுதனர். தகவலின் பேரில் சம்பவ இடத்திற்கு வந்த அஸ்தம்பட்டி போலீசார், அரசகுருவின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக சேலம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

மேலும், இந்த சம்பவம் குறித்து தந்தை சிவகுரு புகாரின் அடிப்படையில் போலீசார் வழக்குப்பதிவு செய்து, பள்ளிக்கு செல்ல கட்டாயப்படுத்தியதால் தற்கொலை செய்து கொண்டாரா? அல்லது வேறு ஏதும் காரணமா? என தீவிரமாக  விசாரித்து வருகின்றனர். பள்ளிக்கு செல்ல விருப்பம் இல்லாததால் மாணவர் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அந்த பகுதி மக்களிடையே சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.