பெற்றோர் கண்டித்ததால் 8ஆம் வகுப்பு மாணவர் தற்கொலை... தேனி அருகே சோகம்!

 
suicide

தேனி அருகே பெற்றோர் கண்டித்ததால் 8ஆம் வகுப்பு மாணவர் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.

தேனி அருகே உள்ள பத்திரகாளிபுரம் பகுதியை சேர்ந்தவர் ஆறுமுகம். இவரது 13 வயது மகன் அன்புக்கரசன். இவர் அதே பகுதியில் உள்ள தனியார் பள்ளி ஒன்றில் 8ஆம் வகுப்பு படித்து வந்தார். கடந்த சில நாட்களாக அன்புக்கரசன் பள்ளிக்கு செல்லவில்லை என கூறப்படுகிறது. இதனால் அவரை பெற்றோர் கண்டித்து பள்ளிக்கு செல்லும்படி கூறியுள்ளனர். இதனால் அவர் மனமுடைந்து காணப்பட்டு வந்துள்ளார். இந்த நிலையில், நேற்று பெற்றோர் வேலைக்கு சென்ற நிலையில் வீட்டில் தனியாக இருந்த அன்புக்கரசு தூக்கிட்டு தற்கொலை செய்து கொள்ள முயன்றார். 

theni

அப்போது, அக்கம் பக்கத்தினர் அவரை மீட்டு அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்தனர். அங்கு அவரை பரிசோதனை செய்த மருத்துவர் அன்புக்கரசன் ஏற்கனவே இறந்து விட்டதாக தெரிவித்தனர். தகவல் அறிந்த பழனிசெட்டிப்பட்டி போலீசார், அவரது உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும், இந்த தற்கொலை சம்பவம் குறித்து பழனிசெட்டிபட்டி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.