திருவாரூரில் ஓரே நாளில் சட்டவிரோதமாக மது விற்ற 70 பேர் கைது!

 
arrest

திருவாரூர் மாவட்டத்தில் சட்ட விரோதமாக மதுபாட்டில்கள் விற்பனை செய்ததாக ஒரே நாளில் 58 வழக்குகள் பதிவு செய்து, 70 நபர்களை போலீசார் கைது செய்தனர்.

பொங்கல் பண்டிகையை முன்னிட்டு திருவாரூர் மாவட்ட எஸ்.பி. சுரேஷ்குமார் உத்தரவின் பேரில், மாவட்டம் முழுவதும் சட்ட விரோதமாக மதுபாட்டில்கள் விற்பனையை தடுக்கும் பொருட்டு போலீசார் தீவிர சோதனையில் ஈடுபட்டனர். இதில் தடையை மீறி மது விற்பனையில் ஈடுபட்ட நபர்கள் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்து, அவர்களை கைது செய்தனர். இந்த நிலையில், கடந்த 15ஆம் தேதி அன்று மட்டும் போலீசார் நடத்திய சோதனையில் மாவட்டம் முழுவதும் சட்ட விரோதமாக மதுபாட்டில்கள் விற்பனை செய்ததாக 58 வழக்குகள் பதிவு செய்யப்பட்டு, 70 நபர்கள் கைது செய்யப்பட்டனர்.

tvr SP

மேலும், அவர்களிடமிருந்து விற்பனைக்காக வைக்கப்பட்டு இருந்த 790 மதுபாட்டில்கள் பறிமுதல் செய்யப்பட்டது. மேலும், திருவாரூர் மாவட்டத்தில் தொடர்ந்து மது விற்பனையில் ஈடுபடும் நபர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என மாவட்ட எஸ்.பி. சுரேஷ்குமார் எச்சரிக்கை விடுத்துள்ளார்.