ராமநாதபுரம் மக்கள் குறைதீர் கூட்டத்தில் 269 மனுக்கள் பெறப்பட்டன!

 
ramnad

ராமநாதபுரத்தில் ஆட்சியர் ஜானி டாம் வர்கீஸ் தலைமையில் நடைபெற்ற மக்கள் குறை தீர்க்கும் நாள் கூட்டத்தில் பொதுமக்களிடம் இருந்து 269 மனுக்கள் பெறப்பட்டன.

ராமநாதபுரம் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் நேற்று மக்கள் குறை தீர்க்கும் நாள் கூட்டம் ஆட்சியர் ஜானிடாம் வர்கீஸ் தலைமையில் நடைபெற்றது. இந்த கூட்டத்தில் ஆட்சியர் பொதுமக்களிடம் கோரிக்கை மனுக்களை பெற்று, மனுதாரர் முன்னிலையில் விசாரித்து தொடர்புடைய அலுவலர்களிடம் மனுக்களை வழங்கி உரிய நடவடிக்கையை விரைந்து மேற்கொள்ள உத்தரவிட்டார். இந்த கூட்டத்தில் பொதுமக்களிடம் இருந்து 269 மனுக்கள் பெறப்பட்டன. இம்மனுக்களில் வீட்டுமனைப் பட்டா, குடிநீர் இணைப்பு வழங்குதல், முதியோர் உதவித்தொகை குறித்த மனுக்களே அதிகளவு வரப்பெற்றன. 

ramnad

இந்த கூட்ட்ததில் பேசிய ஆட்சியர் ஜானிடாம் வர்கீஸ், ஒவ்வொரு வாரமும் பொதுமக்களிடம் பெறக்கூடிய மனுக்களுக்கு உரிய நடவடிக்கை மேற்கொண்டு ஒரு மாத காலத்திற்குள் மனுதார்களுக்கு உரிய தீர்வு வழங்கிட வேண்டும். தீர்வு வழங்க முடியாத மனுக்கள் குறித்து மனுதாரர்களிடம் உரிய காரணம் குறித்து எடுத்துரைக்க வேண்டும். அப்போது தான் அதுபோன்ற மனுக்கள் திரும்ப திரும்ப வராது, எனவே பொதுமக்கள் வழங்கும் மனுக்களுக்கு துறை அலுவலர்கள் சிறப்பு கவனம் எடுத்து செயல்பட வேண்டும் என அவர் கூறினார்.

இந்த கூட்டத்தில் மாவட்ட வருவாய் அலுவலர் காமாட்சி கணேசன்,  பயிற்சி உதவி ஆட்சியர் நாராயண சர்மா, ஆட்சியரின் நேர்முக உதவியாளர்(பொது) சேக் மன்சூர் மற்றும் உயர் அதிகாரிகள் கலந்து கொண்டனர்.