திருவண்ணாமலை அருகே வீட்டின் ஜன்னலை உடைத்து 25 பவுன் நகை கொள்ளை!

 
robbery

திருவண்ணாமலை அருகே வீட்டின் ஜன்னல் கம்பிகளை உடைத்து உள்ளே புகுந்த கொள்ளையர்கள் 25 பவுன் நகைகளை திருடிச்சென்ற சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

திருவண்ணாமலை அருகே உள்ள நல்லவன்பாளையம் சர்வேசா கார்டன் பகுதியை சேர்ந்தவர் ரமேஷ். இவர் சித்தர் பீடம் ஒன்றின் நிர்வாகியாக உள்ளார். இந்த நிலையில், கடந்த திங்கட்கிழமை ரமேஷ் குடும்பத்துடன் வேலூரில் நடைபெற்ற நிகழ்ச்சிக்கு புறப்பட்டு சென்றுள்ளார். இந்த நிலையில், நேற்று அவரது வீட்டின் ஜன்னல் கம்பிகள் உடைக்கப்பட்டு கிடந்தன. இதனை கண்ட அக்கம் பக்கத்தினர் ரமேஷுக்கு தகவல் அளித்தனர். அதன் பேரில், ரமேஷ் வீட்டிற்கு விரைந்து வந்து பார்த்துள்ளார்.

tiruvannamalai

அப்போது, ஜன்னல் கம்பிகளை உடைத்து உள்ளே புகுந்த மர்மநபர்கள் 25 பவுன் தங்க நகைகளை திருடிச் சென்றது தெரியவந்தது.  இது குறித்து அவர் திருவண்ணாமலை தாலுகா போலீசில் புகார் அளித்தார். அதன் பேரில், போலீசார் சம்பவ இடத்திற்கு நேரில் சென்று விசாரணை மேற்கொண்டனர். மேலும், இந்த கொள்ளை சம்பவம் குறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து கொள்ளையர்களை தேடி வருகின்றனர்.