திருவாரூர் மக்கள் குறைதீர் கூட்டத்தில் பொதுமக்களிடமிருந்து 208 மனுக்கள் பெறப்பட்டன!

 
tvr

திருவாரூரில் ஆட்சியர் காயத்ரி கிருஷ்ணன் தலைமையில் நடந்த மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டத்தில் பொதுமக்களிடம் இருந்து 208 மனுக்கள் பெறப்பட்டது.

திருவாரூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் இன்று மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் ஆட்சியர் காயத்ரி கிருஷ்ணன் தலைமையில் நடைபெற்றது. இந்த கூட்டத்தில் மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்து வந்த பொதுமக்கள் , ஆட்சியரிடம் கோரிக்கை மனுக்களை வழங்கினர்.
 

tvr
இந்த கூட்டத்தில் பட்டா மாறுதல், புதிய குடும்ப அட்டை, ஆக்கிரமிப்பு அகற்றுதல், கல்விக்கடன், வீட்டுமனைப்பட்டா உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகள் குறித்து 208 மனுக்கள் பெறப்பட்டது. பெறப்பட்ட மனுக்களை ஆட்சியர் காயத்ரி கிருஷ்ணன் சம்பந்தப்பட்ட அதிகாரிகளிடம் வழங்கி, மனுக்கள் மீது குறித்த காலத்திற்குள் உடனடியாக நடவடிக்கை மேற்கொள்ள உத்தரவிட்டார்.

தொடர்ந்து, தமிழ்நாடு அரசு பொது நூலகத்துறையின் சார்பில் மன்னார்குடி மற்றும் திருத்துறைப்பூண்டியில் இயங்கி வரும் முழு நேர கிளை நூலகங்களுக்கு தலா ரூ.40 ஆயிரம் மதிப்பிலான 4 மெய் நிகர் நூலக கருவியை, ஆட்சியர் காயத்ரி கிருஷ்ணன் வழங்கினார்.