13 வயது சிறுமிக்கு பாலியல் தொல்லை... முதியவர் போக்சோ சட்டத்தில் கைது!

 
pocso

தூத்துக்குடியில் 13 வயது சிறுமிக்கு பாலியல் தொல்லை அளித்த முதியவரை போலீசார் போக்சோ சட்டத்தில் கைது செய்தனர்.

தூத்துக்குடி திருச்செந்தூர் சாலையில் உள்ள எம்.ஜி.ஆர். நகர் பகுதியை சேர்ந்தவர் சவரிமுத்து (78). சம்பவத்தன்று, இவர் அதே பகுதியை சேர்ந்த 13 வயது சிறுமியை ஆசை வார்த்தை கூறி தனது வீட்டிற்கு அழைத்துச் சென்று, அங்கு அவருக்கு பாலியல் தொல்லை அளித்துள்ளார். இதனால் அதிர்ச்சி அடைந்த சிறுமி, கத்தி கூச்சலிட்டுள்ளார். அவரது சத்தம் கேட்டு, அருகில் உள்ளவர்கள் ஓடிச்சென்று சிறுமியை மீட்டு உள்ளனர்.

arrest

இது குறித்து சிறுமியின் தாயார், தூத்துக்குடி அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் புகார் அளித்தார். புகாரின் அடிப்படையில் காவல் ஆய்வாளர் வனிதா வழக்குப்பதிவு செய்து, விசாரணை மேற்கொண்டார். அதில் சவரிமுத்து, சிறுமிக்கு பாலியல் தொல்லை அளித்தது உறுதியான நிலையில், அவர் மீது போக்சோ சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு செய்து, சவரி முத்துவை கைது செய்தார். தொடர்ந்து, கைதான சவரிமுத்து, நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டார்.