டிவி பார்ப்பதை தாய் கண்டித்ததால் 10ஆம் வகுப்பு மாணவி தற்கொலை!

 
suicide

தருமபுரியில் டிவி பார்ப்பதை தாய் கண்டித்ததால் 10ஆம் வகுப்பு மாணவி தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.

தருமபுரி நந்தி நகரில் வசித்து வருபவர் சேர்ந்தவர் முனுசாமி. இவரது மகள் தனுஸ்ரீ (15). இவர் அந்த பகுதியில் உள்ள தனியார் பள்ளியில் 10ஆம் வகுப்பு படித்து வந்தார். பொதுத்தேர்வு நெருங்கி வரும் நிலையில் தனுஸ்ரீ அடிக்கடி டிவி பார்த்துக்கொண்டு படிப்பில் கவனம் செலுத்தவில்லை என கூறப்படுகிறது. இந்த நிலையில், கடந்த சனிக்கிழமை மாலை பள்ளி முடிந்து வீட்டிற்கு வந்த தனுஸ்ரீ டிவி பார்த்துக் கொண்டிருந்தார். இதனை கண்ட அவரது தாய், தனுஸ்ரீயை கண்டித்து அவரை படிப்பில் கவனம் செலுத்தும்படி கூறியுள்ளார். இதனால் மனமுடைந்த மாணவி தனுஸ்ரீ தனது அறைக்குள் சென்று தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார்.

dharmapuri gh

தகவலின் பேரில் தருமபுரி டவுன் போலீசார், அவரது உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக தருமபுரி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும், இந்த சம்பவம் குறித்து வழக்குப்பதிவு செய்து, விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.  டிவி பார்ப்பதை பெற்றோர் கண்டித்ததால் 10ஆம் வகுப்பு மாணவி தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அந்த பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.