அரசுப்பேருந்து மோதி, மாவட்ட எய்ட்ஸ் கட்டுப்பாட்டு திட்ட பெண் அதிகாரி பலி!

 

அரசுப்பேருந்து மோதி, மாவட்ட எய்ட்ஸ் கட்டுப்பாட்டு திட்ட பெண் அதிகாரி பலி!

கன்னியாகுமரி

கன்னியாகுமரி அருகே இருசக்கர வாகனம் மீது அரசுப் பேருந்து மோதிய விபத்தில், மாவட்ட எய்ட்ஸ் கட்டுப்பாட்டு திட்ட பெண் அதிகாரி உயிரிழந்தார்.

கன்னியாகுமரி மாவட்டம் நாகர்கோவில் பகுதியை சேர்ந்தவர் மருத்துவர் ஸ்டெல்லா ஜெனட் (41). இவர் குமரி மாவட்ட எய்ட்ஸ் கட்டுப்பாட்டு அலுவலகத்தில், திட்ட அலுவலராக பணிபுரிந்து வந்தார். இந்த நிலையில், புதன்கிழமை அன்று ஸ்டெல்லா ஜெனட் பணியை முடித்துவிட்டு, ஆசாரிப்பள்ளம் அரசு மருத்துவமனையில் இருந்து இருசக்கர வாகனத்தில் வீட்டிற்கு திரும்பி கொண்டிருந்தார்.

அரசுப்பேருந்து மோதி, மாவட்ட எய்ட்ஸ் கட்டுப்பாட்டு திட்ட பெண் அதிகாரி பலி!

நாகர்கோவில் கான்கார்டியா பள்ளி அருகே வந்தபோது, ஸ்டெல்லாவின் வாகனம் மீது எதிர்பாராத விதமாக அரசுப் பேருந்து மோதி விபத்திற்குள்ளானது. இதில் வாகனத்தில் இருந்து தூக்கி வீசப்பட்டு படுகாயமடைந்த ஸ்டெல்லா ஜெனட் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார்.

தகவல் அறிந்த, ஆசாரிப்பள்ளம் போலீசார் சடலத்தை மீட்டு பிரேத பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும், விபத்து குறித்து வழக்குப்பதிவு செய்து, விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.