டிபன் வாங்குவதில் தகராறு… உணவக உரிமையாளரின் தம்பி அடித்துக்கொலை!

 

டிபன் வாங்குவதில் தகராறு… உணவக உரிமையாளரின் தம்பி அடித்துக்கொலை!

தஞ்சாவூர்

தஞ்சை அருகே டிபன் வாங்குவதில் ஏற்பட்ட தகராறில் உணவக உரிமையாளரின் தம்பி அடித்துக் கொல்லப்பட்டசம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

தஞ்சை அடுத்த கண்டியூரை சேர்ந்தவர் சாலீப். இவர் அய்யம்பேட்டை பிரதான சாலையில் உணவகம் நடத்தி வருகிறார். இவரது தம்பி முகமதுபாரூக். எலெக்ட்ரீசியன் ஆன இவர் இரவு நேரத்தில் அண்ணனுக்கு உதவியாக கடையில் வேலை பார்த்து வந்துள்ளார். நேற்று இரவு முகமது பாரூக் கடையில் வழக்கம்போல் பணியில் ஈடுபட்டிருந்தார். அப்போது, அங்கு வந்த குளத்துமேட்டு தெருவை சேர்ந்த இளையராஜா(32) என்பவர் சாலிப்பிடம் டிபன் கேட்டு வாக்குவாதம் செய்துள்ளார்.

டிபன் வாங்குவதில் தகராறு… உணவக உரிமையாளரின் தம்பி அடித்துக்கொலை!

அப்போது, முகமது பாரூக் இளையராஜாவை சமாதானம் செய்து அங்கிருந்து செல்லும்படி கூறி உள்ளார். இதனால் ஆத்திரமடைந்த இளையராஜா, தான் வைத்திருந்த இரும்பு கம்பியால் முகமது பாரூக்கின் தலையில் சரமாரியாக தாக்கினார். இதில் படுகாயமடைந்த அவரை அருகில் இருந்தவர்கள் மீட்டு தஞ்சை அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர்.

அங்கு முகமது பரூக்கை பரிசோதித்த மருத்துவர் அவர் ஏற்கனவே இறந்து விட்டதாக தெரிவித்தனர். இதுகுறித்து, சாலீப் அளித்த புகாரின் பேரில் திருவையாறு போலீசார் வழக்குப்பதிவு செய்து, கொலையாளி இளையராஜாவை கைதுசெய்தனர். டிபன் வாங்கும் தகராறில் இளைஞர் அடித்துக்கொல்லப்பட்ட சம்பவம் கண்டியூர் பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.