நண்பர்களுக்குள் தகராறு – சமரசம் பேசிய இளைஞர் அடித்துக்கொலை

 

நண்பர்களுக்குள் தகராறு – சமரசம் பேசிய இளைஞர் அடித்துக்கொலை

வேதாரண்யம் அருகே இருசக்கர வாகனம் இரவல் வாங்கிசென்றபோது ஏற்பட்ட தகராறில் இளைஞர் அடித்துக் கொல்லப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

நண்பர்களுக்குள் தகராறு – சமரசம் பேசிய இளைஞர் அடித்துக்கொலை
நண்பர்களுக்குள் தகராறு – சமரசம் பேசிய இளைஞர் அடித்துக்கொலை

நாகை மாவட்டம் வாய்மேடு அடுத்த சேனாதிகாடு பகுதியை சேர்ந்தவர் மணிகண்டன். இவரது நண்பர் கார்த்தி. இந்நிலையில், மணிகண்டனின் இருசக்கர வாகனத்தை கார்த்தி இரவல் வாங்கிசென்றபோது பழுது ஏற்பட்டதாக கூறப்படுகிறது. இதனையடுத்து, அதேபகுதியை சேர்ந்த செல்வகுமார் என்பவர் இருவருக்கும் சமரசம் செய்துவைத்துள்ளார்.

நண்பர்களுக்குள் தகராறு – சமரசம் பேசிய இளைஞர் அடித்துக்கொலை
நண்பர்களுக்குள் தகராறு – சமரசம் பேசிய இளைஞர் அடித்துக்கொலை

அப்போது ஏற்பட்ட மோதலில் மணிகண்டன், செல்வகுமாரை உருட்டுக் கட்டையால் கடுமையாக தாக்கியுள்ளார். இதில் படுகாயமடைந்த செல்வகுமாரை அப்பகுதியினர் மீட்டு மருத்துவமனைக்கு கொண்டுசென்ற நிலையில், அவர் ஏற்கனவே உயிரிழந்துவிட்டதாக மருத்துவர்கள் தெரிவித்தனர். இதனையடுத்து மணிகண்டனை கைதுசெய்து வாய்மேடு போலீசார் விசாரித்து வருகின்றனர்.

நண்பர்களுக்குள் தகராறு – சமரசம் பேசிய இளைஞர் அடித்துக்கொலை