பெரியார் சிலை மீது காவிசாயம் பூசி அவமரியாதை!

 

பெரியார் சிலை மீது காவிசாயம் பூசி அவமரியாதை!

திருச்சியில் பெரியார் சிலை மீது காவிச்சாயம் பூசப்பட்டதால் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

திருச்சி மாவட்டம் இனாம்குளத்தூர் ஊராட்சியில் உள்ள சமத்துவபுரத்தில் வைக்கப்பட்டுள்ள பெரியார் சிலைக்கு காவி பெயிண்ட் ஊற்றி அவமதிப்பு செய்யப்பட்டுள்ளது . இதை கண்ட அப்பகுதி மக்கள் போலீசாருக்கு தகவல் அளித்தனர். தகவலறிந்து சம்பவ இடத்துக்கு வந்த போலீசார் பெரியார் சிலை மீது இருந்த காவி சாயத்தை சுத்தம் செய்தனர்.

பெரியார் சிலை மீது காவிசாயம் பூசி அவமரியாதை!

அத்துடன் காவிச்சாயம் பூசியவர்கள் குறித்து காவல்துறையினர் தீவிர விசாரணையில் ஈடுப்பட்டு வருகின்றனர். மேலும் அப்பகுதியில் அசம்பாவிதம் நடக்காத வண்ணம் அங்கு போலீசார் குவிக்கப்பட்டுள்ளனர்.

பெரியார் சிலை மீது காவிசாயம் பூசி அவமரியாதை!

கால இடைவேளைக்கு ஏற்ப ஆங்காங்கே பெரியார் போன்ற தலைவர்கள் சிலை அவமதிக்கப்பட்டு வருவது தமிழகத்தில் வாடிக்கையாகி உள்ளது. இது போன்ற செயல்களை தடுக்கும் வகையில் போலீசார் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பதே பொதுமக்களின் எதிர்பார்ப்பாக உள்ளது.