6 துப்பாக்கித்தோட்டாக்கள் கண்டுபிடிப்பு: கோவை விமான நிலையத்தில் பரபரப்பு

 

6 துப்பாக்கித்தோட்டாக்கள் கண்டுபிடிப்பு: கோவை விமான நிலையத்தில் பரபரப்பு

கோவை விமான நிலையத்தின் கழிப்பறையில் 6 துப்பாக்கித் தோட்டாக்கள் கண்டுபிடிக்கப்பட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.

6 துப்பாக்கித்தோட்டாக்கள் கண்டுபிடிப்பு: கோவை விமான நிலையத்தில் பரபரப்பு

கோவை விமான நிலையத்தின் உள்நாட்டு விமானங்கள் புறப்படும் பகுதிக்கு அருகில் ஆண்கள் கழிவறை உள்ளது. நேற்று மதியம், 12:00 மணியளவில் துப்புரவு பணியாளர் செல்வம் துாய்மைப்பணியில் ஈடுபட்டிருந்தார். அப்போது கழிவறையின் உள்பகுதியில் துப்பாக்கித் தோட்டாக்கள் கிடப்பது கண்டு அதிர்ச்சி அடைந்தார். இதுகுறித்து அவர் விமான நிலைய அதிகாரிகளிடம் தெரிவித்ததையடுத்து, அங்கு வந்த மத்திய தொழில் பாதுகாப்பு படையினர்(சி.ஐ.எஸ்.எப்.,) துப்பாக்கித் தோட்டாக்களை கைப்பற்றி ஆய்வு செய்தனர்.

6 துப்பாக்கித்தோட்டாக்கள் கண்டுபிடிப்பு: கோவை விமான நிலையத்தில் பரபரப்பு

அதில், ஒரு எஸ்.எல்.ஆர்., ரக துப்பாக்கி தோட்டாவும், மூன்று, 9 எம்.எம்., துப்பாக்கி தோட்டக்களும், இரு போலி தோட்டாக்களும் இருந்தன. இதையடுத்து சி.ஐ.எஸ்.எப்., பீளமேடு போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். அங்கு சென்ற போலீசார் தோட்டாக்களை கைப்பற்றி விசாரணை நடத்தி வருகின்றனர்.

6 துப்பாக்கித்தோட்டாக்கள் கண்டுபிடிப்பு: கோவை விமான நிலையத்தில் பரபரப்பு

இதுகுறித்து வழக்கு பதிவு செய்த போலீசார் கழிப்பறையில் தோட்டாக்களை போட்டது யார் என்பது குறித்து தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர். விமான நிலையத்தின் கழிப்பறையில் துப்பாக்கி தோட்டாக்கள் கண்டுபிடிக்கப்பட்ட விவகாரம் பரபரப்பு ஏற்பட்டுத்தி இருக்கிறது.