இயக்குநர் எஸ்.பி.ஜனநாதன் காலமானார்!

 

இயக்குநர் எஸ்.பி.ஜனநாதன் காலமானார்!

பிரபல திரைப்பட இயக்குநர் எஸ்.பி ஜனநாதன் உடல்நலக்குறைவால் காலமானார்.

இயக்குநர் எஸ்.பி.ஜனநாதன் காலமானார்!

கடந்த 2003-ம் ஆண்டு வெளியான படம் ’இயற்கை’ படத்தை இயக்கியவர் எஸ்.பி.ஜனநாதன். இப்படத்தில் நடிகர்கள் ஷ்யாம், அருண்விஜய், குட்டி ராதிகா ஆகியோர் நடத்திருந்த நிலையில் இப்படம் தேசிய விருது பெற்றது. இதைத் தொடர்ந்து ஈ, பேராண்மை, புறம்போக்கு என்கிற பொதுவுடைமை உள்ளிட்ட படங்களை இயக்கியுள்ளார். தற்போது விஜய் சேதுபதி, ஸ்ருதி ஹாசன் நடத்தி வரும் லாபம் படத்தை இயக்கி வருகிறார். இப்படத்தின் எடிட்டிங் பணியில் இருந்த அவர் மதிய உணவுக்கு வீட்டுக்கு சென்றுள்ளார். அங்கு மயக்கமடைந்த அவரை அவரின் உதவியாளர்கள் உடனடியாக மீட்டு சென்னை அப்பல்லோ மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார்.இதையடுத்து எஸ்.பி.ஜனநாதனுக்கு மூளைச்சாவு ஏற்பட்டுள்ளதாக சொல்லப்பட்ட நிலையில் அவருக்கு தீவிர சிகிச்சையளிக்கப்பட்டு வந்தது.

இயக்குநர் எஸ்.பி.ஜனநாதன் காலமானார்!

சென்னை அப்பல்லோ மருத்துவமனையின் தீவிர சிகிச்சைப் பிரிவில் அனுமதிக்கப்பட்ட இயக்குநர் ஜனநாதனின் உடல்நிலை குறித்து, நேரில் சென்று நடிகர் விஜய சேதுபதி, இயக்குநர்கள் அமீர், கரு.பழனியப்பன் விசாரித்துள்ளனர் . இந்நிலையில் இயக்குநர் எஸ்.பி.ஜனநாதன் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார். அவரது மறைவுக்கு திரை பிரபலங்கள் பலரும் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.