மகளின் திருமணத்தில் பங்கேற்ற ஸ்டாலின்… இயக்குநர் ஷங்கர் உருக்கம்!

 

மகளின் திருமணத்தில் பங்கேற்ற ஸ்டாலின்… இயக்குநர் ஷங்கர் உருக்கம்!

தனது மகள் திருமணத்தில் பங்கேற்றதற்காக முதல்வர் மு.க ஸ்டாலினுக்கு இயக்குநர் ஷங்கர் நன்றி தெரிவித்துள்ளார்.

தமிழ் சினிமாவில் பிரம்மாண்ட இயக்குநர் என போற்றப்படும் இயக்குநர் ஷங்கரின் மூத்த மகள் திருமணம் நேற்று மகாபலிபுரத்தில் உள்ள ரெசார்ட்டில் நடைபெற்றது. ஷங்கரின் மூத்த மகள் ஐஸ்வர்யாவுக்கும் புதுச்சேரி கிரிக்கெட் அணியின் கேப்டனான ரோஹித்துக்கும் அண்மையில் நிச்சயதார்த்தம் நடைபெற்றது.

மகளின் திருமணத்தில் பங்கேற்ற ஸ்டாலின்… இயக்குநர் ஷங்கர் உருக்கம்!

மகளின் திருமணத்தை பிரம்மாண்டமாக நடத்த வேண்டும் என ஷங்கர் திட்டமிட்டிருந்த நிலையில் கொரோனா காரணமாக நெருங்கிய குடும்ப உறுப்பினர்கள் மற்றும் நண்பர்கள் மட்டுமே கலந்து கொள்ளும் வகையில் ரெசார்ட்டில் திருமணத்தை நடத்தி முடித்தார் ஷங்கர். இந்த திருமணத்தில் முதல்வர் மு.க ஸ்டாலின், உதயநிதி ஸ்டாலின், அமைச்சர் மா.சுப்பிரமணியன் உள்ளிட்டோர் நேரில் சென்று வாழ்த்தினர். அவர்களுக்கு ஷங்கர் மரக்கன்றை பரிசளித்தார்.

இந்த நிலையில், மகளின் திருமணத்தில் நேரில் கலந்து கொண்டு முதல்வர் வாழ்த்தியது மறக்க முடியாத ஆசீர்வாதம் என இயக்குநர் ஷங்கர் உருக்கமாக தெரிவித்துள்ளார். திருமணத்தில் பங்கேற்றதற்கு நன்றி என்றும் கூறியுள்ளார்.