பாரதிராஜாவிடம் மன்னிப்பு கேட்டார் ‘இரண்டாம் குத்து’ பட இயக்குநர்

 

பாரதிராஜாவிடம் மன்னிப்பு கேட்டார் ‘இரண்டாம் குத்து’ பட இயக்குநர்

ஹரஹர மஹாதேவகி, இருட்டு அறையில் முரட்டு குத்து படங்களை இயக்கிய சந்தோஷ் பி ஜெயகுமார், இயத்தில் உருவாகியிருக்கும் படம் இரண்டாம் குத்து. இப்படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியான போதே கடும் எதிர்ப்பை கிளப்பியது. இந்த நிலையில் நேற்று டீசரை வெளியிட்டனர். இதற்கான போஸ்டர்கள் எல்லை மீறிய ஆபாசங்களாக இருந்ததால் சர்ச்சை கிளம்பியது.

பாரதிராஜாவிடம் மன்னிப்பு கேட்டார் ‘இரண்டாம் குத்து’ பட இயக்குநர்

இதுகுறித்து பாரதிராஜா வெளியிட்டுள்ள அறிக்கையில், ‘சினிமா வாழ்க்கை முறையை சொல்லலாம் தப்பில்லை. இலைமறை காய் மறையாக சரசங்கள் பேசலாம். ஆனால் இப்படி படுக்கையை எடுத்து நடுத்தெருவில் வைப்பது எந்த விதத்தில் சரி? நான் கலாச்சார சீர்கேடு என கூறும் நபர் அல்ல. ஆனால் என் வீட்டின் கண்ணியம் காக்கப்பட வேண்டும் என நினைப்பவன். கலைநயத்தோடு செய்யப்படும் எந்த படைப்பையும் விழுந்து ரசிப்பவன். ஆனால் இரண்டாம் குத்து என்ற படத்தின் விளம்பரத்தை என் கண்களால் பார்க்கவே கூசினேன்” என கண்டனங்களை தெரிவித்திருந்தார்.

பாரதிராஜாவிடம் மன்னிப்பு கேட்டார் ‘இரண்டாம் குத்து’ பட இயக்குநர்

அதைத்தொடர்ந்து படத்தின் இயக்குநர் சந்தோஷ் பி ஜெயக்குமார், அவரது விமர்சனத்துக்கு கடுமையாக மறுப்புத் தெரிவித்து டிவிட்டரில் பதிவிட்டிருந்தார். தற்போது அவர், இயக்குநர் பாரதிராஜாவிடம் மன்னிப்பு கேட்டு ட்விட்டரில் கடிதம் ஒன்றைப் பதிவிட்டுள்ளார். அந்த கடித்டத்தில், “அறிக்கையைப் படித்துவிட்டு வந்த கனத்தின் வெப்பத்தில் எனது டிவிட்டர் பதிவில் ஒரு ட்வீட் போட்டுவிட்டேன். அது அவசரத்தில் என்ன செய்கிறோம் என்று தெரியாமல் செய்தது. அதற்குப் பிறகு நாம் அவசரத்தில் இதை செய்திருக்கக்கூடாது என்று மனம் கூறியது. ஆகவே, நான் போட்ட ட்வீட்டிற்கு வருத்தம் தெரிவிக்கிறேன். தமிழ்த் திரையுலகின் மூத்த இயக்குநர் பாரதிராஜா அவர்கள். அவருடைய சாதனைகளில் ஒரு சதவீதமாவது நாம் செய்துவிடமாட்டோமா என்று பலரும் பணிபுரிந்துவருகிறார்கள். பல்வேறு இயக்குநர்களுக்கு பாரதிராஜா அவர்கள் வழிகாட்டியாக இருந்திருக்கிறார். இருக்கிறார். எப்போதும் இருப்பார். அவருடைய அறிக்கைக்கு நான் அவ்வாறு எதிர்வினையாற்றி இருக்கக்கூடாது. இரண்டாவது குத்து படத்தின் அடுத்துவரும் போஸ்டர்கள், அனைத்துத் தரப்பு மக்களும் பார்க்கும் வகையில் இருக்கும்” என தெரிவித்துள்ளார்.