பிரபல இயக்குநர் நிஷிகாந்த் காமத் காலமானார்!

 

பிரபல இயக்குநர் நிஷிகாந்த் காமத் காலமானார்!

மாதவன் நடிப்பில் வெளியான ‘எவனோ ஒருவன்’ படத்தின் இயக்குநர் நிஷிகாந்த் காமத் காலமானார். அவருக்கு வயது 50.

‘டோம்பிவில்லி ஃபாஸ்ட்’ என்கிற மராத்திய திரைப்படத்தின் மூலம் தனது திரையுலகப் பயணத்தை தொடங்கியவர் நிஷிகாந்த். இந்த படத்தை தமிழில் மாதவனை கதாநாயகான வைத்து ‘எவனோ ஒருவன்’ என்ற பெயரில் ரீமேக் செய்தார். இப்படம் எதிர்பார்த்த அளவு வெற்றிப்பெறவில்லை. இதனை தொடர்ந்து, ‘மும்பை மேரி ஜான்’, ‘ஃபோர்ஸ்’ (காக்க காக்க ரீமேக்), ‘லாய் பாரி’ (மராத்தி), ‘த்ரிஷ்யம்’ (இந்தி ரீமேக்) என அடுத்தடுத்து பல்வேறு படங்களை இயக்கி வெற்றிநடைப்போட்டார். தற்போது தர்பதர் என்ற திரைப்படத்தை இயக்கிக்கொண்டிருக்கிறார்.

பிரபல இயக்குநர் நிஷிகாந்த் காமத் காலமானார்!

கடந்த சில நாட்களாக கல்லீரல் பிரச்னை காரணமாக ஹைதராபாத்தில் உள்ள மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த அவர், இன்று மாலை சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். நிஷிகாந்த் மறைவுக்கு திரையுலக பிரபலங்கள் பலரும் தங்களுடைய இரங்கலைத் தெரிவித்து வருகின்றனர்.